உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் : உண்மையை கண்டறிய சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் - ஜீ.எல்.பீரிஸ்

Published By: Digital Desk 3

26 Apr, 2024 | 07:36 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. உண்மையை கண்டறிய வேண்டுமாயின் சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். விசேட பொறிமுறை ஊடான விசாரணைகள் ஊடாகவே உண்மையை கண்டறிய முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களில் 300 பேர் உயிரிழந்தார்கள். 500 பேர் படுகாயமடைந்தார்கள். ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஆனால்  இதுவரை  உண்மை பகிரங்கப்படுத்தப்படவில்லை. நீதியும் கிடைக்கப்பெறவில்லை.

குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில்  முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் மீது கத்தோலிக்க மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையில்லை.உண்மையை கண்டறிவதற்காக  விசேட பொறிமுறை ஒன்று வகுக்கப்பட வேண்டும்.

1948ஆம் ஆண்டு 14ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழு கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் விசேட பொறிமுறை வகுக்கப்பட வேண்டும். முறையான விசாரணைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பும், சர்வதேச தரப்பினரது கண்காணிப்பும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

உள்ளக விசாரணைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதொன்றும் புதிதல்ல உதலாகம ஆணைக்குழு விசாரணைகளிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டது. நாட்டு மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமாயின் சர்வதேச ஒத்துழைப்புடன் விசேட பொறிமுறை ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

 விசேட  பொறிமுறை ஊடான விசாரணைகள் பரந்துப்பட்ட வகையில் காணப்பட வேண்டும். அவ்வாறான நிலையில் கிடைக்கப்பெறும் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வழக்குத் தாக்கல் செய்வதற்கு  சட்டமா அதிபருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுமார் 300 கிலோ போதைப்பொருட்களுடன் 6...

2025-11-12 10:41:26
news-image

எதிர்க்கட்சியினரிடம் ஹிட்லர் போல் கத்தி, ஐ.எம்.எப்....

2025-11-12 11:17:11
news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02