வழக்கு தீர்ப்பை பிற்படுத்தி உயர் நீதிமன்றம் அரசியலமைப்பை மீறியுள்ளது - லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவிப்பு

26 Apr, 2024 | 08:30 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

எமது பக்கத்தில் இருந்து ஆளும் தரப்புக்கு சென்ற உறுப்பினர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை இடம்பெற்று 5 மாதங்களாகியும் இதுவரை தீர்ப்பு வழங்காமல் இருப்பதன் மூலம் உயர் நீதிமன்றம் அரசியலமைப்பை மீறியுள்ளது என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ எழுப்பிய சிறப்புரிமை பிரச்சினை குறித்த ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி  குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்ற எதிர்க்கட்சியில் இருக்கும் ஆளும் கட்சிக்கு சென்ற இரண்டு பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழக்கை விசாரணை செய்த 3 நீதிபதிகளில் 2 நீதிபதிகள் வழக்கு தீர்ப்பை எழுதி இருக்கிறார்கள் என்றே தெரிவித்தேன். வழக்கு தீர்ப்பு என்ன என தெரிவிக்கவில்லை. 

வழக்கு தொடுக்கப்பட்டால் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து 2 மாதங்களில் அதன் தீர்ப்பை வழங்க வேண்டும் என அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் தொடுத்திருக்கும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு 5 மாதங்கள் ஆகியுள்ளன. அதனால் தீர்ப்பு எதுவானாலும் தீர்ப்பை வழங்குமாறு 3ஆவது நீதிபதிக்கு தெரிவிக்கிறோம். அதனை தெரிவிக்கும் அதிகாரம் எமக்கு இருக்கிறது.

அத்துடன் குறித்த வழக்கில் 2 நீதிபதிகள் வழக்கு தீர்ப்பை எழுதி இருப்பதாக குறித்த வழக்குக்காக முன்னிலையாகி இருக்கும் எமது சட்டத்தரணிகள் எமக்கு தெரிவித்திருக்கின்றனர். அதேபோன்று புதுக்கடையில் இருக்கும் அனைத்து சட்டத்தரணிகளுக்கும் இது தெரியும். அதேபோன்று இந்த வழக்கு தீர்ப்பை வழங்குமாறு பிரதம நீதியரசரும் சம்பந்தப்பட்ட  நீதிபதிக்கு தெரிவித்திருக்கிறார். ஆனால் குறித்த நீதிபதி அதனை செய்யாமல் இருக்கிறார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-14 06:08:27
news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21