மஹாவலி ஆற்றில் நீராடச் சென்ற 18 வயதுடைய மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி பல்லேகலை பிரதேசத்தைச் சேர்ந்த இந்த மாணவி உறவினர் வீடொன்றுக்கு வந்திருந்த போது உறவினர்களுடன் மஹாவலி ஆற்றில் நீராடச் சென்றுள்ளார்.
கன்னோருவ பிரதேசத்தில் உள்ள இந்த மஹாவலி கங்கையில் நீராடியபோதே இந்த மாணவி நீரில் மூழ்கியுள்ளார்.
அவ்வேளை, உறவினர்கள் அவரை காப்பாற்ற முயன்றபோதும் முடியாமல் போயுள்ளது. பின்னர், அயலவர்களின் உதவியுடன் மாணவியை மீட்டு பேராதனை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையிலேயே அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
பல்லேகலை பிரதேசத்தைச் சேர்ந்த அருன்திகா பிரசாதினி என்ற 18 வயதுடைய மாணவியே உயிரிழந்தவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM