கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

19 Apr, 2024 | 02:37 PM
image

(நமது நி­ருபர்) 

இந்­திய பிர­தமர் நரேந்­தி­ர­ மோடி தலை­மை­யி­லான ஆளும் பார­திய ஜனதா கட்­சி­யா­னது, கச்­ச­தீவு விவ­கா­ரத்­தை பேசு­பொ­ரு­ளாக்­கி­யுள்ள நிலையில், வடக்கு மாகாண கடற்­றொ­ழி­லா­ளர்கள் ‘கச்­ச­தீவை வைத்து அர­சியல் செய்­யா­தீர்கள்’ என்று இந்­திய மத்­திய அர­சாங்­கத்­தையும், தமி­ழக அர­சையும் பகி­ரங்­க­மாக கோரி­யுள்­ளனர்.

கச்­ச­தீவை உரிமை கோரு­வது தொடர்­பாக இலங்கை, இந்­திய நாடு­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சினை 1921இலேயே முதன் முதலில் ஆரம்­ப­மானது.

ஆங்­கி­லேயர் ஆட்­சிக்­கா­லத்தில் பாக்­கு ­நீ­ரி­ணைக்கும், மன்னார் குடா­வுக்கும் இடையில் ஓர் எல்­லையை வகுப்­ப­தற்­கான மாநாடு ஒன்று கொழும்பில் இந்­தியா மற்றும் இலங்கை குடி­யேற்ற நாட்டு அர­சு­க­ளி­டையே 1921 ஒக்டோ­பரில் நடை­பெற்­றது.

இரு­ த­ரப்­பி­னரும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் முர­ணான கோரிக்­கை­களை முன்­வைத்­தனர். இலங்கை தூதுக் குழுவின் தலைவர் ஹோர்ஸ்பேர்க் அப்­போ­தைய வட­ மா­காண அரச அதிபர் “எல்லை நிர்­ண­ய­மா­னது நடுக்­கோட்டைப் பின்­பற்றி அமைதல் வேண்டும். கச்­ச­தீ­வுக்கு மேற்கே 3 மைலில் அந்த எல்­லைக்­கோடு அமைதல் வேண்டும்” எனக் கோரினார்.

இதற்கு இந்­தியத் தரப்பு மறுத்துவிட்­டது. கச்­ச­தீவு இரா­ம­நா­த­புரம் ராஜாவின் கீழ் உள்­ளது என்றும் அவர் தமது விருப்­பப்­ப­டியே குத்­த­கைக்கு கொடுத்து வரு­கிறார் எனவும் காட்­டப்­பட்­டது. இது கச்­ச­தீவு உரிமை தொடர்­பான பிரச்­சி­னைகள் உள்­ளன என்­பதை வெளிக்கொணர்ந்­தது.

இதனால் இப்­பி­ரச்­சி­னைக்கு அழுத்தம் கொடுக்­கப்­ப­ட­வில்லை. எனினும், கச்­ச­தீவு உரிமை தொடர்­பான பிரச்­சி­னையை தவிர்த்­து­விட்டு மீன்­பிடி உரி­மைகள் நிர்­ண­யிக்­கப்­பட்­டன. ஆகவே, முன்னர் கூறி­ய­படி 3 மைல் மேற்கு எல்லை நிர்­ண­யிக்­கப்­பட்­டது. இதனால் மீன் பிடிக்கும் உரி­மையை இந்­தியா இழந்­தது.

அதற்கு ஈடாக முக்­கிய சங்­குத்­திட்டுப் பகு­திகள் இந்­தி­யாவின் எல்­லைக்குள் வீழ்ந்­தன. ஆனால் பிரித்­தா­னிய அரசு இந்த ஒப்­பந்­தத்தை உறு­திப்­ப­டுத்த மறுத்­து­விட்­டது. அதா­வது இவ்­வு­டன்­ப­டிக்கை இந்­திய இரா­ஜாங்கச் செய­லா­ளரின் அங்­கீ­காரம் பெறாமல் இருந்­தது.

இதன் கார­ண­மாக 1921ஆம் ஆண்டு ஒப்­பந்தம் நிலை­யா­ன­தா­கவும். உறு­தி­வாய்ந்­த­தா­கவும் அமை­ய­வில்லை. இலங்­கையும் இந்­தி­யாவும் சுதந்­தி­ர­ம­டைந்து 1974ஆம் ஆண்டில் இன்­னொரு உடன்­ப­டிக்கை செய்துகொள்­ளும் ­வரை கச்­ச­தீவு தொடர்­பான விவ­காரம் தொடர்ந்­தது.

இந்­நி­லையில், இலங்கை - இந்­தி­யா­வுக்கு இடையில் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி செய்­து­கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கையின் பிர­காரம் பாரம்­ப­ரிய நீர்ப்­பரப்பு பகு­தி­களில் ஒன்­றான ஆதாம் பாலத்­தி­லி­ருந்து பாக்கு நீரிணை வரை­யி­லு­மான பகு­திக்கு கடல் எல்லை நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

அக­லாங்கு, நெட்­டாங்கு அடிப்­ப­டையில் வகுக்­கப்­பட்ட கடல் எல்­லைக்­கோ­டா­னது நீண்­ட­கா­ல­மாக இவ்­விரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் கச்­ச­தீவு தொடர்­பாக இருந்து வந்த தக­ராறுக்கு ஒரு முற்றுப்புள்­ளி­ வைக்க உத­வி­யது.

இதனால் இவ்­வு­டன்­ப­டிக்கை முக்­கியம் வாய்ந்த ஒன்­றாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. இவ்­வு­டன்­ப­டிக்­கையில் உள்ள 5ஆவது, 6ஆவது சரத்­துகள் கச்­ச­தீவு இலங்­கைக்­கு­ரி­ய­தாக இருந்­த­போ­திலும் இந்­தி­ய­ மீ­ன­வர்கள் பாரம்­ப­ரி­ய­மாக அனு­ப­வித்து வந்த உரி­மை­களை அனு­ப­விக்க வழி­செய்­கின்­றது.

5ஆவது சரத்­தா­னது, “மேற்­கு­றிப்­பிட்­ட­வற்­றுக்­குட்­பட்டு இந்­தி­ய­ மீ­ன­வர்­களும் யாத்­தி­ரி­கர்­களும் இது­வரை அனு­ப­வித்­தது போல கச்ச­தீ­வுக்குச் செல்லும் உரி­மையைப் பெறுவர். தொடர்ந்தும் அவ்­வு­ரி­மையை அனு­ப­விப்பர். இந்த நோக்­கங்­க­ளுக்­காக பிர­யாண ஆவ­ணங்­களோ விசாக்­களோ இலங்­கை­யி­லி­ருந்து பெற­ வேண்­டு­மென தேவைப்­ப­டுத்­த ­மு­டி­யாது. இதற்கு அவ­சி­யமும் இல்லை. இலங்கை இதற்கு நிபந்­தனை விதிக்­கவும் முடி­யாது” என்­றுள்­ளது.

6ஆவது சரத்­தா­னது, “இலங்­கை­யி­னதும் இந்­தி­யா­வி­னதும் பட­குகள் மற்­ற­வரின் நீர்ப்­ப­ரப்­பி­னதும் ஒவ்­வொ­ரு­வ­ரதும் நீர்ப்­ப­ரப்­பி­னுள்ளும் பாரம்பரி­ய­மாக அனு­ப­வித்து வந்த உரி­மை­களைத் தொடர்ந்தும் அனு­ப­விப்பர்” என்று குறிப்­பி­டு­கின்­றது.

இதன் ­பி­ர­காரம், 1974ஆம் ஆண்டு உடன்­ப­டிக்­கையின் பிர­காரம் கச்­ச­தீ­வா­னது இலங்­கையின் எல்லைப் பகு­தி­யினுள் வந்­த­தோடு இலங்­கைத்­ த­ரப்பில் மகிழ்ச்­சியும் வர­வேற்­பும் காணப்­பட்­டது.

வர­லாற்­றுப் ­பின்­னணி இப்­ப­டி­யி­ருக்­கையில், வடக்கு மாகாண கடற்­றொ­ழி­லா­ளர்கள் கச்­ச­தீ­வை மீண்டும் இந்­தியா பேசு­பொ­ரு­ளாக்­கு­வதை விரும்­ப­வில்லை என்­ப­தோடு, குறித்த விட­யத்­தைப் பயன்­ப­டுத்தி அர­சியல் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தையும் ஏற்­றுக்­கொள்ளத் தயா­ராக இல்லை.

அந்த வகையில், வட­ம­ராட்சி வடக்கு கடற்­றொ­ழி­லாளர் கூட்­டு­றவு சங்­கங்­களின் சம்­மே­ள­னத்தின் உப­த­லைவர் நாக­ராசா வர்­ண­கு­ல­சிங்கம் தெரி­விக்­கையில், “இந்­திய, இலங்கை மீன­வர்­க­ளுக்கு இடையில் முரண்­பா­டுகள் ஏற்­பட்டு விடக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவே கச்­ச­தீவு உடன்­பாடு எட்­டப்­பட்­டது. அப்­ப­டி­யி­ருக்­கையில், கச்­ச­தீவை மீளப்­பெ­றுவோம் என்று இந்­திய அர­சி­யல்­வா­திகள் தொடர்ச்­சி­யாக தெரி­விப்­பதை ஏற்­றுக்கொள்ள முடி­யாது. அவ்­வாறு கருத்து தெரி­விப்­ப­வர்கள் முதலில் கச்­ச­தீவு எங்­குள்­ளது, இலங்­கைக்கும் அந்தத் தீவுக்கும் எந்­த­ளவு இடை­வெளி காணப்­ப­டு­கின்­றது என்­பது தொடர்பில் புரிதல் அவ­சி­ய­மா­கின்­றது.

அதே­நேரம், கச்­ச­தீ­வா­னது தற்­போது இலங்­கையின் இறை­யாண்மை எல்­லைக்­குள்­ளேயே காணப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றி­ருக்­கையில் இலங்­கையின் இறை­யாண்­மையை மீறி எவ்­வாறு இந்­தியா அந்தப் பகு­தியை மீட்­டுக்­கொள்ள முடியும்?

ஏற்­க­னவே இந்­திய கடற்­றொ­ழி­லா­ளர்கள் அத்­து­மீறி எமது கடல் ­வ­ளங்­களை பறித்­துக்­கொண்­டி­ருக்­கையில் கச்­ச­தீவை இந்­தியா பெற்­றுக்­கொண்டால் எமது எதிர்­காலம் எப்­ப­டி­யி­ருக்கும்? மனி­தா­பி­மான முறையில் இந்­தியா சிந்­திக்க வேண்டும் என்­ப­தோடு கச்­ச­தீவை விட்­டுக்­கொ­டுப்­ப­தற்கு நாம் அனு­ம­திக்க மாட்­டோம்”­ என்­கிறார்.

இதே­நேரம், வட ­மா­காண கடற்­றொ­ழி­லாளர் இணை­யத்தின் செய­லாளர் என்.எம்.ஆலம் தெரி­விக்­கையில், “இந்­திய மத்­திய அர­சியலிலும் தமி­ழக அர­சியலி­லும் புதி­தாக ஒரு நிலைப்­பா­டாக கச்­ச­தீவு விடயம் தோன்­றி­யுள்­ளது. இதை அவர்கள் அர­சி­ய­லுக்கு பயன்­ப­டுத்தக் கூறி இருந்­தாலும் அங்­குள்ள மீன­வர்­களைக் குறிப்­பாக சட்­ட­வி­ரோத மீன்­பிடி நட­வ­டிக்­கை­களிலிருந்து மாற நினைக்கும் மீன­வர்­களை இந்தத் தொழிலில் உள்­வாங்கி அவர்­களை உற்­சாகமூட்­டு­வ­தாக அமை­கி­றது.

கச்­ச­தீவு விட­யத்தைப் பல தட­வைகள் தமி­ழக அரசு தான் மேலோங்கச் செய்­துள்­ளது. இந்­திய மீன­வர்கள் கைது செய்­யப்­படும் ஒவ்­வொரு கால­கட்­டத்­திலும் கச்­ச­தீவை மீளப் ­பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்­கையை தொடர்ந்து வலி­யு­றுத்­தி­யது தமி­ழக அரசு தான்.

தமி­ழக அர­சாக இருந்­தாலும், இந்­திய அர­சாக இருந்­தாலும் அவர்கள் அர­சி­ய­லுக்­காக இந்த விட­யத்தை மீண்டும் மீண்டும் பேசித் தமி­ழக மீன­வர்­களை உற்­சாகப்படுத்­து­வதும் இந்த விட­யத்தை கேலிக் கூத்­தாக்­கு­வ­தையும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது” என்றார்.

இதே­வேளை, அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்­சங்­கத்தின் வட­ மா­காண இணைப்­பாளர் அன்­ன­லிங்கம் அன்­ன­ராசா தெரி­விக்­கையில், “கச்­ச­தீ­வா­னது இலங்­கையின் இறை­மைக்­குள்­ளான பிர­தேசம் என்­பதை விடவும், வடக்கு கடற்­றொ­ழி­லா­ளர்­களின் பாது­காப்பு அர­ணாக காணப்­ப­டு­கின்­றது. அதனைப் பறித்­தெ­டுப்­ப­தென்­பது, வடக்கு கடற்­றொ­ழி­லா­ளர்­களின் வாழ்­வா­தா­ரத்­தைப் பறித்­தெ­டுப்­ப­தற்கு நிக­ரா­ன­தாகும் என்­பதை இந்­திய அர­சியல் தலை­வர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்­திய மீன­வர்கள் எல்­லை­ தாண்டி வருகை தரு­வ­தற்கும், இலங்கை, இந்­திய மீன­வர்­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சி­னை­க­ளுக்கும் கச்­ச­தீவு எந்­த­வ­கை­யிலும் கார­ண­மா­காது என்­பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே அர­சியல் நோக்­கத்­துக்­காக கடற்­றொ­ழி­லாளர் பிரச்­சி­னை­களை கச்­ச­தீவு பிரச்­சி­னை­யாக திசை திருப்ப வேண்டாம்” என்றார்.

அதே­நேரம், யாழ். மாவட்ட கிரா­மிய அமைப்பின் பொரு­ளாளர் செல்­லத்­துரை மகேசன் தெரி­விக்­கையில், “ஆயி­ரக்­க­ணக்­கான வடக்கு,கிழக்கு மீன­வர்கள் அன்­றாடம் தமது நாட்டு மீன­வர்­களால் பாதிக்­கப்­ப­டு­கின்­றார்கள் என்­பது தொடர்பில் இந்­திய அர­சாங்­கமோ, தமி­ழக அர­சாங்­கமோ எவ்­வி­த­மான கரி­ச­னை­க­ளையும் கொள்­ள­வில்லை.

அவர்கள் அர­சி­ய­லுக்­காக கச்­ச­தீவு விட­யத்­தை கையெ­டுத்­துள்­ளார்கள். தேர்தல் நிறை­வுக்கு வந்­த­வுடன் அதனை மறந்­து­வி­டு­வார்கள். ஆனால் மீன­வர்கள் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­த­ர­த் தீர்­வை எடுக்க முடி­யா­த­வர்கள் எவ்­வாறு தமி­ழர்கள் விட­யத்­துக்கு தீர்­வை வழங்­கு­வார்கள்” என்று கேள்வி எழுப்­பு­கின்றார்.

மேலும், அகில இலங்கை தொழி­லாளர் சமூக கூட்­ட­மைப்பின் தேசிய அமைப்­பாளர் எம்.வி.சுப்­பி­ர­ம­ணியம் கூறு­கையில், “கச்­ச­தீ­வை மீட்டே தீருவோம் என்று அர­சியல் மேடை­களில் வெளி­யாகும் பேச்­சுக்­களை நம்பி மக்கள் வாக்குகளை வழங்குவார்கள் என்ற திட்டத்திலேயே தற்போதைய நிகழ்வு கள் நடைபெறுகின்றன.

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி யிருக்கும் இலங்கையின் இரு செவிகளிலும் பிடித்திருக்கும் இந்தியா, அதனை தமது விருப்பத்துக்கு ஏற்ப ஆட்டிப்படைக்கலாம் என்று கருதுகின்றது. ஆனால் தேர்தல் முடிந்தவுடன் கச்சதீவு விடயம் மௌனிக் கப்படும் என்பதால் அது பற்றி நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை” என்றார்.

தற்போது தமிழக அரசியல் மேடைகளில் கச்சதீவு விடயம் பேசப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் தமிழகத்தில் பாராளுமன்றத்துக்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.  எனினும், தேர்தலின் பின்னரும், கச்சதீவு விவகாரம் நீடிக்காது என்ற எதிர்பார்ப்புகள் காணப்பட்டாலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது, “தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் கச்சதீவு விடயத்தை எவ்வாறு கையாள்வது என்பது எனக்குத் தெரியும்” என்றுரைத்தமையானது இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றமான சூழல் தொடரப்போவதற்கான கட்டியங் கூறலாகவே உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்கால சந்ததியினர் மத்தியில் அச்சுறுத்தலாக மாறும்...

2025-01-19 16:20:27
news-image

கிறிப்டோ கரன்சி என்றால் என்ன? இலங்கையில்...

2025-01-19 16:10:32
news-image

பனிப்பாறைகளின் இறையாண்மை

2025-01-19 15:56:51
news-image

சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக்கட்சியின் அஸ்தமித்துப்போன கனவா?...

2025-01-19 15:45:57
news-image

உயிர்களை பறிக்கும் வீதி விபத்துக்கள்

2025-01-19 15:33:13
news-image

தேவைப்படுவது தமிழ் மைய அரசியலே

2025-01-19 15:18:20
news-image

சேமிப்பாளர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய விதத்தில் புதிய நிதியியல்...

2025-01-19 15:13:50
news-image

அரசியல் கட்சிகளின் நிலைபேற்றை விடவும் சமூகத்தின்...

2025-01-19 15:06:36
news-image

புதிய அரசியல் யாப்பு அறிமுகமாகுமா?

2025-01-19 14:50:05
news-image

முஸ்லிம்கள் மீதான உரிமை மீறல்கள்

2025-01-19 14:42:18
news-image

புதிய தலைமையில் பொருண்மிய மீட்சி பெறுமா...

2025-01-19 14:08:55
news-image

மீண்டும் பலமடையும் விமானப்படை

2025-01-19 13:46:36