லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

19 Apr, 2024 | 02:03 PM
image

லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொப்டன் தோட்ட , 19 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள பழைய தொழிற்சாலைப் பிரிவில் மலைப்பாங்கான பிரதேசத்தில் ஓடும் ஆற்றில் மூழ்கி 16 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவரொருவர்  உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை  (18) மாலைவேளையில் இடம்பெற்றுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

குறித்த மாணவனும் அவருடைய நண்பர்கள் இருவரும் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த வேளை திடீரென ஏற்பட்ட சுழியில் சிக்குண்டு நீரினுள் இழுத்துச் செல்லப்பட்ட மாணவன் கற்பாறைக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். 

மாணவனின் சடலம் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு ஹொப்டன் ஆதார வைத்தியசாலையில்   பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இம்மாணவன் இப்பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயின்று வந்துள்ளார்.  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையுடனான கடன்மறுசீரமைப்பு ; 7பில்லின் டொலர்கள்...

2025-03-15 18:15:27
news-image

சீனாவுக்கான இராஜதந்திர பயணத்தில் பல்வேறு வெற்றி...

2025-03-15 18:17:43
news-image

ரணில் - சஜித் இணையும் வரை...

2025-03-15 18:58:16
news-image

இன்றைய வானிலை

2025-03-16 06:32:14
news-image

படையினரால் வன்கொடுமைக்குள்ளான தமிழ் பெண்களுக்கு நீதி...

2025-03-15 18:19:12
news-image

இந்தியப் பிரதமர் மோடி ஏப்ரல் முதல்...

2025-03-15 17:14:14
news-image

ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா ?...

2025-03-15 18:57:17
news-image

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160...

2025-03-15 17:06:12
news-image

அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம்

2025-03-15 17:09:04
news-image

அரசின் உள்ளகப்பொறிமுறை தீர்மானம் வெட்கக்கேடானது :...

2025-03-15 18:22:55
news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58