வட மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சாள்ஸ் பயணித்த உத்தியோகபூர்வ வாகனம் யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) விபத்துக்குள்ளானது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வட மாகாண ஆளுநரின் வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம், பாதசாரிகள் கடவையில் வேகத்தைக் கட்டுப்படுத்திய நிலையில் அப்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஆளுநர் வாகனத் தொடரணி வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ஆளுநர் தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM