3 கோடி ரூபா பெறுமதியான போதைமாத்திரைகளை விழுங்கிய நிலையில் வந்த வெளிநாட்டுப் பெண் விமான நிலையத்தில் கைது 

14 Apr, 2024 | 12:51 PM
image

சுமார் 75 கொக்கெய்ன் போதைமாத்திரைகளை விழுங்கிய நிலையில் விமான நிலைத்திற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணொருவர் விமானநிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடந்த 12 ஆம் திகதி விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மடகஸ்கரைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருளின் பெறுமதி சுமார்  3 கோடியே 50 இலட்சம்   ரூபாவென சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த பெண் எத்தியோப்பியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்து இந்தியாவின் மும்பையில் இருந்து இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

போதைப்பொருளை விழுங்கிய நிலையில் கைது செய்யப்பட்ட பெண்ணை நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று விழுங்கிய கொக்கெய்ன் மாத்திரைகளை வெளியேற்றினர்.

இதையடுத்து மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பெண் கொக்கெய்ன் போதை மாத்திரைகளுடன் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடெங்கும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கம்; பொதுமக்கள்...

2025-01-18 17:06:52
news-image

ஆலயங்களை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பேன்...

2025-01-18 21:40:27
news-image

மருந்து உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க...

2025-01-18 15:55:31
news-image

உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால்...

2025-01-18 15:56:17
news-image

புங்குடுதீவில் குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

2025-01-18 18:22:23
news-image

சம்மாந்துறையில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய...

2025-01-18 18:15:19
news-image

2026இல் மறுமலர்ச்சியின் தைப்பொங்கலாக கொண்டாடுவோம் -...

2025-01-18 22:11:38
news-image

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய...

2025-01-18 17:13:58
news-image

வருமான வரி பரிசோதகர்கள் என கூறி...

2025-01-18 16:41:05
news-image

களுத்துறையில் பாலமொன்றுக்கு அருகில் குப்பை கூளங்களில்...

2025-01-18 16:55:31
news-image

கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் போதைப்பொருளுடன்...

2025-01-18 16:02:19
news-image

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் விவசாயிகள்...

2025-01-18 16:09:52