சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!

10 Apr, 2024 | 05:19 PM
image

எப்பாவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரலோகம, மீகஸ்ஸேகம பகுதியில் சுகயீனம் காரணமாக உயிரிழந்த இனந்தெரியாத நபரொருவர் தொடர்பில் அடையாளம் காண எப்பாவல பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

உயிரிழந்தவர் கூலி தொழிலுக்காக எப்பாவல பிரதேசத்திற்கு வந்துள்ளதாகவும், இதன்போது இவர் சுகயீனமடைந்துள்ள நிலையில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலத்திற்கு அருகிலிருந்து வைத்தியசாலையின் மருத்துவ புத்தகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இவரது பெயர் டபிள்யூ.ஏ சன்னி எனவும் இவர் 82 வயதுடையவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது உடலில் மார்பு பகுதியில் இறக்கைகளை விரித்த  நிலையில் ஒரு பறவையின் உருவம் பச்சை குத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் 025-2249122 என்ற எப்பாவல பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு எப்பாவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

2025-02-10 15:52:07
news-image

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

2025-02-10 15:42:53
news-image

மின்வெட்டு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

2025-02-10 15:24:38
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி...

2025-02-10 14:30:09
news-image

ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ;...

2025-02-10 13:57:16
news-image

மீனவர்கள் விவகாரம் இலங்கை மீது இந்தியா...

2025-02-10 14:05:21
news-image

ஜனாதிபதி நிதியத்திலிருந்து முறைகேடாக வழங்கப்பட்ட நிதி...

2025-02-10 14:20:22
news-image

யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த...

2025-02-10 13:16:40
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-10 12:51:11
news-image

வவுனியா - தோனிக்கல் பகுதியில் கேரள...

2025-02-10 13:16:05
news-image

கெப் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்திச்...

2025-02-10 12:45:06
news-image

ஹட்டனில் சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்பு

2025-02-10 13:10:27