பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட விசேட குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்று (9) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மோதரை, மொரட்டுவை , மீகொடை , அங்கொடை , அதுருகிரிய மற்றும் ஹோகந்தர ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மோதரை, மொரட்டுவை , மீகொடை , அங்கொடை , அதுருகிரிய மற்றும் ஹோகந்தர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23,35, 65, 26, 30 , 43 மற்றும் 41 வயதுடைய ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் பொரலஸ்கமுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பெல்லந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மிட்டியாகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மிட்டியாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக குற்றக் குழுக்களைச் சேர்ந்த 363 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM