2009 ஆம் ஆண்டு எனது கணவரை நான் இராணுவத்திடம் ஒப்படைத்தேன்

Published By: Raam

21 Mar, 2017 | 11:54 PM
image

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

அமெரிக்கா இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை நம்பியே 2009 ஆம் ஆண்டு எமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்தோம்.  எனவே  எமக்கு இணைத்தலைமை நாடுகள் பதிலளிக்கவேண்டும் என்று  வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். 

ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்ற உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் 

2009 ஆம் ஆண்டு எனது கணவரை நான் இராணுவத்திடம் ஒப்படைத்தேன். அன்று முதல் கணவரை தேடிக்கொண்டிருக்கின்றேன். இப்போது அரசியல் அங்கீகாரத்துடன்  ஐ.நா. மனித உரிமை  பேரவையில் நீதிக்காக போராடிக்கொண்டிருக்கின்றேன். 

2009 ஆம் ஆண்டு எங்கள் உறவுகளை நாங்கள் இராணுவத்திடம் கையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு இணைத் தலைமை நாடுகள் வழிவகுத்திருந்தன. ஜப்பான், நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இதனை செய்தன. அப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானிய அங்கம் வகித்திருந்தது. அதனால் எமது உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலைமையை இணைத் தலைமை நாடுகள் ஏற்படுத்தின.

2009 இல் இராணுவத்திடம் எம்மை சர்வதேசம் விட்டுவிட்டதைப் போன்று 2015 இல் பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கத்திடம் விட்டு விட்டது. இவை இரண்டுமே தவறாகும். எமக்கு சர்வதேசம் பதிலளிக்க வேண்டும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17