உணவு ஒவ்வாமையால் 100 பேர் பாதிக்கப்பட்டு மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதி!

08 Apr, 2024 | 01:33 PM
image

ஸ்ரீபாத நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் தோட்ட ஆலய வருடாந்த திருவிழாவின் போது வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களில் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 100 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிறுவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஆண்கள் பலர் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (7) வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்ட பின் இவர்கள் அனைவரும் மயக்க நிலைக்குள்ளானதாகவும் இதனையடுத்து இவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் 40 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்த மஸ்கெலியா பிரதேச வைத்திய நிர்வாகம் இவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்...

2025-02-19 14:22:43
news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23