அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியிலுள்ள நிந்தவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாட்டுபாளையம் பகுதியில் பஸ்வண்டி மோட்டர்சைக்கிளில் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று சனிக்கிழமை (06) பகல் இடம்பெற்றுள்ளதோடு, பஸ்வண்டி சாரதியை கைது செய்துள்ளதாக நிந்தவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நிந்தவூர் 5 ம் பிரிவைச் சேர்ந்த 72 வயதுடைய அகமட் லெப்பை மீராலெப்பை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நிந்தவூர் மாட்டுபாளையம் சந்திக்கு அருகில் இன்று பகல் 11.30 மணியளவில் பொத்துவில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பஸ்வண்டி மோட்டர் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற வயோதிர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நிந்தவூர் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் பஸ்வண்டி சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM