'மகாவலியின் மைந்தன்' சிறுவர் நாவல் : திருமலையில் வெளியீட்டு விழா

05 Apr, 2024 | 03:21 PM
image

ஈழத்தில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டவரான மூத்த எழுத்தாளர், கவிஞர் கேணிப்பித்தன் ச. அருளானந்தத்தின் சிறுவர் நூல்கள் தொடரில் 73ஆவது நூலாகவும் மகுடம் பதிப்பகத்தின் 76ஆவது வெளியீடாகவும் அமைந்த ‘மகாவலியின் மைந்தன்’ சிறுவர் நாவலின் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை (07) காலை 10 மணிக்கு திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

'அன்பின் பாதையின் எண்ணம் போல் வாழ்க்கை' கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில் மன்றத் தலைவர் கனக. தீபகாந்தன் தலைமையுரை வழங்குவார்.

இந்த நிகழ்வில் வெளியீட்டு உரையை வி. மைக்கல் கொலின் வழங்க, நூல் ஆய்வுரையை திருமலை நவம் ஆற்றுவார்.

கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி.  தண்டாயுதபாணி இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.

அத்தோடு, திருகோணமலையின் படைப்பாளிகள், கவிஞர்கள், கலை இலக்கிய நண்பர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் முதல் முறையாக உளுந்து வடை...

2025-05-16 19:49:36
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றம் வழங்கும்...

2025-05-15 15:06:44
news-image

 ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாகவும்...

2025-05-15 15:31:54
news-image

இலங்கை எழுதுபொருள் வியாபார சங்கத்தின் ஏற்பாட்டில்...

2025-05-14 18:20:24
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-14 18:04:34
news-image

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஒளிமயமாக அலங்கரிக்கப்பட்ட...

2025-05-14 15:01:58
news-image

வருடாந்த தேசிய தேயிலை நிகழ்வு 2025

2025-05-14 13:03:43
news-image

புதிய அலை கலை வட்டத்தினரின் வெசாக்...

2025-05-13 15:27:27
news-image

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்...

2025-05-13 14:41:57
news-image

யாழ். கொக்குவில் தென்னாடு சிவ மடத்தில்...

2025-05-13 12:34:28
news-image

மன்னார் அம்பாரவேல் பிள்ளையார் ஆலய மஹோற்சவத்தின்...

2025-05-12 17:26:46
news-image

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு கிளி. இரணைமடு...

2025-05-12 17:15:36