ஈழத்தில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டவரான மூத்த எழுத்தாளர், கவிஞர் கேணிப்பித்தன் ச. அருளானந்தத்தின் சிறுவர் நூல்கள் தொடரில் 73ஆவது நூலாகவும் மகுடம் பதிப்பகத்தின் 76ஆவது வெளியீடாகவும் அமைந்த ‘மகாவலியின் மைந்தன்’ சிறுவர் நாவலின் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை (07) காலை 10 மணிக்கு திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
'அன்பின் பாதையின் எண்ணம் போல் வாழ்க்கை' கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில் மன்றத் தலைவர் கனக. தீபகாந்தன் தலைமையுரை வழங்குவார்.
இந்த நிகழ்வில் வெளியீட்டு உரையை வி. மைக்கல் கொலின் வழங்க, நூல் ஆய்வுரையை திருமலை நவம் ஆற்றுவார்.
கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.
அத்தோடு, திருகோணமலையின் படைப்பாளிகள், கவிஞர்கள், கலை இலக்கிய நண்பர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM