பௌத்தம் மற்றும் ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை ஜூன் 26 ஆம் திகதி வரை நீக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே புதன்கிழமை (03) உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, எதிர்வரும் காலங்களில் அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் விரிவுரைகளை நடத்தவுள்ள ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு கோட்டை நீதிவானிடம் கோரிக்கை விடுத்தார்.
ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டாலும் கைது செய்யப்படுவார் எனத் தெரிந்தும் கடந்த முறை இலங்கை வந்ததாகவும், விரிவுரைகளை முடித்துக்கொண்டு அவ்வாறே இலங்கை திரும்பவுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM