ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் - பிரேம்நாத் சி.தொலவத்தே

05 Apr, 2024 | 10:19 AM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்குவேன். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சிறந்த தீர்மானத்தை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பொருளாதார பாதிப்புக்கு ஜனாதிபதியால் மாத்திரம் நிலையான தீர்வு காண முடியும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  பிரேம்நாத் சி தொலவத்தே தெரிவித்தார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை (03) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயார் என்று அரசியல் கட்சித் தலைவர்களும்,சுயாதீன வேட்பாளர்களும் குறிப்பிடுகிறார்கள்.ஆனால் பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களை எவரும் முன்வைக்கவில்லை.

 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது எவரும் அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை.நெருக்கடியான சூழலில் நிபந்தனை விதித்துக் கொண்டு தங்களின் அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ளவே அவதானம் செலுத்தினார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே சவால்களை பொறுப்பேற்றார்.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அவர் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம்.அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்காக ஜனாதிபதி எடுத்த சகல தீர்மானங்களுக்கும் நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்கினோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் அவருக்கு ஆதரவு வழங்குவோம்.பொருளாதார நெருக்கடிக்கு அவரால் மாத்திரமே நிலையான தீர்வு காண முடியும் என்பது நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாற்றம் வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொண்டு மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினால் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் மக்கள் மத்தியில் பிரபல்யமடைவதற்காக தற்போதைய மறுசீரமைப்பு  தீர்மானங்களை மாற்றியமைக்கும் அவ்வாறான நிலை தோற்றம் பெற்றால் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை மீண்டும் எதிர்கொள்ள நேரிடும்.

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்கள் தீர்மானமிக்கவை.அரசியல் வாக்குறுதிகளுக்கு அவதானம் செலுத்தாமல் பொருளாதார மீட்சியை மாத்திரம் கருத்திற் கொண்டு மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53