அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 7

03 Apr, 2024 | 04:12 PM
image

எம்மில் சிலர் உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்த உடல் எடையை விட சற்று கூடுதலாக இருப்பர். உடல் எடை சிறிது தானே அதிகரித்திருக்கிறது என கவனியாதிருந்தால் உங்களது இதயம், மூளை உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் உள்ள ரத்த நாளங்களில் கொழுப்பு படிவு அதிகமாகி, இரத்த ஓட்டம் தடைப்பட்டு, மாரடைப்பு, மூட்டு வலி போன்ற துயரங்களை எதிர்கொள்ள நேரிடும். இதற்காக தற்போது மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில் நுட்பங்கள் மூலம் கண்டறியப்பட்ட. மருந்தியல் சிகிச்சைகள் அறிமுகமாகி நல்ல பலனை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் பாதிப்பு இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படக்கூடும். மூளைக்கு கழுத்து வழியாக ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படக்கூடும்.‌ 

இத்தகைய ரத்த நாளங்களில் இயல்பான அளவைவிட கூடுதலாக தேக்கமடைந்திருக்கும் கொழுப்பு படிவுகள் ரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. வேறு சில தருணங்களில் இவை வெடித்து, ரத்த உறைவதற்கும் காரணமாகிறது. இதனால் பாரிய சிக்கல்களுக்கு ஆளாகிறோம்.

நெஞ்சு வலி, மார்பு பகுதியில் அழுத்துவது போன்ற உணர்வு, தோள்கள் மற்றும் கால்கள் பகுதிகளில் திடீரென்று மரத்துப்போதல், பார்வையில் தடுமாற்றம், பேச்சில் தெளிவின்மை, மூட்டு வலி, சிறுநீரக செயலிழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்  உங்களுடைய ரத்த நாளங்களில் கொழுப்பு இயல்பான அளவைவிட கூடுதலாக சேகரமாகி இருக்கிறது என பொருள் கொள்ளலாம்.

மேலும் சிலருக்கு உயர் குருதி அழுத்தம், அதீத கொழுப்பு, நீரிழிவு, உடற்பருமன், இன்சுலின் சுரத்தல் தொடர்பான பிரச்சனை, புகைப்பிடித்தல்  போன்ற பல்வேறு காரணங்களால்  உங்களுடைய ரத்த நாளங்களில் கொழுப்பு படியக்கூடும். 

இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால்  இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படக்கூடும். இவை உயிருக்கு அச்சுறுத்தலையும் உண்டாக்கலாம்.

இவர்கள் மருத்துவர்கள் அணுகினால், அவர்கள் உங்களை பரிசோதித்து ரத்த பரிசோதனை, எலக்ட்ரோ கார்டியோகிராம் எக்கோ கார்டியோகிராம், அல்ட்ரா சவுண்ட், அஞ்சியோ கிராம், எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பர்.

முடிவுகளின் அடிப்படையில் உங்களுக்கு சிகிச்சைகள் தீர்மானிக்கப்படும். நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்ட மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணம் வழங்கப்படும்.

சிலருக்கு PCI எனும் பெர்குடேனியஸ் கரோனரி இன்டர்வென்ஷன், என்டார்டெரெக்டோமி, ஃபைப்ரினோலிடிக் தெரபி ஆகிய சத்திர சிகிச்சைகளின் மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.

டொக்டர் துர்கா தேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளஸன்டா அக்ரிடா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-03-22 16:55:55
news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15