(நா.தனுஜா)
உலகளாவிய ரீதியில் மிகத்துரிதமாக வளர்ச்சியடைந்துவரும் பிராந்தியமாக தெற்காசியா விளங்குவதாகவும், இந்தியாவின் வேகமான வளர்ச்சியே அதற்குப் பிரதான காரணமாக அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும் உலக வங்கி, இப்பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளின் வளர்ச்சி மந்தகரமான நிலையிலேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான தெற்காசியப்பிராந்திய அபிவிருத்தி நிலைவரம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி நிலைவரம் தொடர்பான மதிப்பீடு நேற்று செவ்வாய்கிழமை 'வன் கோல்பேஸ் டவரில்' அமைந்துள்ள உலக வங்கியின் இலங்கைக்கிளை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.
அதனை முன்னிட்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஒருங்கிணைப்பில் உலக வங்கியினால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெற்காசியப்பிராந்தியத்தின் அபிவிருத்தி நிலைவரம் குறித்து விளக்கமளிக்கையிலேயே உலக வங்கியின் தெற்காசியப்பிராந்தியத்துக்கான சிரேஷ்ட பொருளியலாளர் பிரான்ஸிஸ்கா ஒன்ஸோர்ஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2024 - 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் மிகத்துரிதமாக வளர்ச்சியடைந்துவரும் பிராந்தியமாக தெற்காசியப்பிராந்தியம் காணப்படுவதாகவும், இந்தியாவின் வேகமான வளர்ச்சியே அதற்குரிய பிரதான காரணம் எனவும் சுட்டிக்காட்டிய அவர், இருப்பினும் கொவிட் - 19 பெருந்தொற்றுக்குப் பின்னரான காலகட்டத்தில் இப்பிராந்தியத்தின் ஏனைய நாடுகளின் வளர்ச்சி மந்தகரமான நிலையிலேயே இருப்பதாகத் தெரிவித்தார். அதற்கமைய 2024 இல் தெற்காசியப்பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக அமைந்திருக்கின்றது.
அதேவேளை உலகின் ஏனைய பிராந்தியங்களுடன் ஒப்பிடுகையில் தெற்காசியப்பிராந்தியத்தின் வளர்ச்சியானது பெருமளவுக்கு அரசதுறையிலேயே தங்கியிருப்பதாகவும், எனவே அத்துறைக்கான செலவினங்கள் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்த பிரான்ஸிஸ்கா, இருப்பினும் தனியார் முதலீடுகளின் வளர்ச்சி குன்றியிருப்பதுடன் இது புதிய வர்த்தக மற்றும் நிதியிடல் வாய்ப்புக்கள், தரமான கட்டமைப்புக்கள் ஆகியவற்றின் தேவையை உணர்த்துவதாகக் குறிப்பிட்டார்.
தெற்காசியப்பிராந்தியம் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய சவால்களால் பல்வேறு தாக்கங்களுக்கு முகங்கொடுத்துவருகின்றது. இச்சவால்களால் குறிப்பாக வறியவர்கள் வெகுவாகப் பாதிப்படைவதுடன், அதற்கு இசைவாக்கமடைவதில் குடும்பங்களும், விவசாயிகளும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். எனவே இதனை உரியவாறு கையாள்வதற்கான உத்திகளில் பிரதானமானது வீதிகள், பாலம் போன்ற பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உதவக்கூடிய கட்டமைப்புக்களில் முதலீடு செய்வதாகும்' என்றும் உலக வங்கியின் தெற்காசியப்பிராந்தியத்துக்கான சிரேஷ்ட பொருளியலாளர் சுட்டிக்காட்டினார்.
மேலும் தெற்காசியப்பிராந்தியத்தில் தொழில்புரியும் வயதுடையோரின் சனத்தொகை தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்ற போதிலும், அதனை ஈடுசெய்யக்கூடியவகையில் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை என கரிசனை வெளியிட்ட அவர், வலுவான வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் நிதியியல் சந்தைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் என்பன நீண்டகால அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி, தனியார்துறை முதலீடுகள் மற்றும் அரச வருமானம் என்பன அதிகரிப்பதற்கும், குடும்பங்கள் காலநிலைமாற்ற சவால்களை சீராகக் கையாள்வதற்கும் உதவும் எனப் பரிந்துரைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM