(நெவில் அன்தனி)
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 மும்முனை கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டியில் அவுஸ்திரேலியாவை 7 விக்கெட்களால் இங்கிலாந்து இலகுவாக வெற்றிகொண்டது.
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணியும் பங்குபற்றும் இந்த மும்முனை தொடரில் அவுஸ்திரெலியா தான் விளையாடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றியையே ஈட்டியுள்ளது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது.
முதல் 3 விக்கெட்களை 29 ஓட்டங்களுக்கு இழந்த அவுஸ்திரேலியா, அணித் தலைவி அமி ஸ்மித், லூசி ஃபின் ஆகியோர் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 91 ஓட்டங்களின் மூலம் கௌரவமான நிலையை அடைந்தது.
அமி ஸ்மித் 45 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 50 ஓட்டங்களையும் லூசி ஃபின் 27 பந்துகளில் 3 பவுண்டறிகளுடன் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.
பின்வரிசையில் எவரும் பிரகாசிக்கவில்லை.
பந்துவீச்சில் டில்லி கோட்டீன் கொல்மன் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜொசி க்ரோவ்ஸ் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆவா லீ 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து மகளிர் அணி 13.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.
எரின் தோமஸ் (16), டாவினா பெரின் ஆகிய இருவரும் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
மொத்த எண்ணிக்கை 66 ஓட்டங்களாக இருந்தபோது ஜொடி க்றூகொக் 6 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
எனினும் டாவினா பெரினும் அபி நோக்ரோவும் 3ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை இங்கிலாந்துக்கு அண்மிக்க உதவினர்.
டாவினா பெரின் 38 பந்துகளில் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 56 ஓட்டங்களைப் பெற்றார்.
அபி நோக்ரோவ் 30 ஓட்டங்களுடனும் அமுருதா சுரேன்குமார் ஒரு ஓட்டத்துட னும் ஆட்டம் இழக்காமலிருந்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதிசெய்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM