சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தை புறக்கோட்டை மொத்த வியாபார சந்தையில் முதல் முறையாக வாங்க முடியும் என இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சீன வெங்காயத்தின் ஒரு கிலோவின் மொத்த விலை 320 ரூபா எனவும் இந்த வெங்காயம் நல்ல நிலையில் காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.
இந்தியாவும் பாகிஸ்தானும் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்ததையடுத்து, இலங்கையில் இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதனையடுத்தே இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் சீனாவிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஆரம்பித்ததுடன் திங்கட்கிழமை (01) முதல் புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் சீன பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.
இதனால், பண்டிகைக் காலங்களில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும், நுகர்வோர் தங்களுக்குத் தேவையான வெங்காயத்தை தட்டுப்படின்றி பெற்றுக் கொள்ளலாம் என்றும் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM