உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் : நீதிக்கட்டமைப்பால் விசாரணைகளை முன்னெடுக்க முடியாது - நீதியமைச்சர்

01 Apr, 2024 | 05:15 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நீதிக்கட்டமைப்புக்கு முடியாது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தால் வழக்குத் தாக்கல் செய்ய முடியும். குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆகையால் நீதியை கோருகிறேன் என  நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் பேசப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் நீதியமைச்சர் பதவியில் இருந்துகொண்டு ' ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் ஒருசில இலங்கையர்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள்.

நாட்டில் இரத்த வெள்ளம் ஓடும் செயற்பாடுகளில் ஈடுபட இவர்கள் எத்தணித்துள்ளார்கள். ஆகவே இவ்விடயம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் ' என்று குறிப்பிட்டேன்.

அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் நான் குறிப்பிட்ட கருத்துக்கு எதிராக எமது அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் உட்பட உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள்.விஜேயதாச ராஜபக்ஷ ' பொய்காரர், இனவாதி, என்று என்னை கடுமையாக விமர்சித்தார்கள்.அதனை தொடர்ந்து அமைச்சு பதவியில் இருந்து நான் நீக்கப்பட்டேன்.

நான் குறிப்பிட்டதை போன்றே குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் அப்போதைய அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர் 'அலரி மாளிகையில் ஊடக சந்திப்பை நடத்தி' நடந்தது நடந்து விட்டது, நாங்கள் என்ன செய்வது' என்று குறிப்பிட்டார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நான் சாட்சியமளித்தேன்.

ஆணைக்குழுவுக்கு குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் எனக்கு எதிராக இரு தரப்பில் இருந்து நட்டஈடுகோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

வழக்குத் தாக்கல் செய்யுமாறு நான் சவால் விடுத்தேன்.ஆனால் இதுவரை எவரும் எனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை.

குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்.இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபருக்கோ, நீதியமைச்சுக்கோ, நீதிமன்றத்துக்கோ விசாரணைகளை முன்னெடுக்க முடியாது.

பொலிஸ் உட்பட விசாரணை தரப்பினர் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தால் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்யும் அதனை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43
news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22
news-image

கெகலிய ரம்புக்கல பெற்ற நஷ்ட ஈட்டை...

2025-02-09 19:04:03
news-image

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான...

2025-02-09 18:42:17
news-image

அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில்...

2025-02-09 17:38:47
news-image

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு...

2025-02-09 17:29:03
news-image

முச்சக்கரவண்டியின் பாகங்கள்,ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது

2025-02-09 17:27:04
news-image

தோணா பாலம் - மீள் கட்டுமான...

2025-02-09 17:25:24