(இராஜதுரை ஹஷான்)
வெளிநாட்டு அரசமுறை கடன்களை எதிர்வரும் ஜூலை மாதத்துக்குக்குள் மறுசீரமைக்காவிடின் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும். பஷிலின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவதா ? அல்லது நாட்டை ஸ்திரப்படுத்துவதா ? என்பதை ஜனாதிபதியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இரத்தினபுரி நகரில் ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்னும் உண்மை வெளிவரவில்லை.திட்டமிடப்பட்ட அரசியல் நாடகமாகவே இந்த குண்டுத்தாக்குதலை கருத வேண்டும்.ஐந்து வருடகால சூழ்ச்சியின் ஊடாகவே கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார்.
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை குறிப்பிட்டதற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு மேல் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.ஞானசார தேரரை பயன்படுத்தி சிங்கள முஸ்லிம்; இனங்களுக்கிடையில் முரண்பாட்டைத் தோற்றுவித்தவர்கள் இன்று சுதந்திரமாக உள்ளார்கள்.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு முன்னர் திட்டமிட்ட வகையில் இன முரண்பாடுகள் உருவாக்கப்பட்டன.அதனை ஒரு தரப்பினர் தங்களின் குறுகிய அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு சற்று ஸ்திரநிலையடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஆனால் தற்போதைய முன்னேற்றம் நிலையானதாக அமைய வேண்டும். பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
வெளிநாட்டு அரசமுறை கடன்கள் எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் மறுசீரமைக்க வேண்டும்.இல்லையேல் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொள்ள நேரிடும்.அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அல்லது ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என பஷில் ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.
நாட்டில் அரசியல் ஸ்திரப்படுத்தலுக்காக பொதுத்தேர்தலை நடத்த கோருவதாக ராஜபக்ஷர்கள் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷர்கள் படுதோல்வியடைவார்கள் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.ஆகவே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலை நடத்தி, பாராளுமன்றத்துக்கு சென்று விடலாம் என்று ராஜபக்ஷர்கள் முயற்சிக்கிறார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM