உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்களில் 6,522 பொலிஸார் கடமையில்

31 Mar, 2024 | 01:27 PM
image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இன்றையதினம் கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு தினத்தை இன்று கொண்டாடுகின்றனர்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகளில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 273 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் . 

இந்நிலையில், கத்தோலிக்க தேவாலயங்களில் இன்றையதினம் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறுவருவதன் காரணமாக அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 1,873 கிறிஸ்தவ தேவாலயங்களில் 6,522 பொலிஸார்  320 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் 2,746 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே பொலிஸாரின் பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தில் மக்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த எதிர்க்கட்சித்...

2025-01-16 13:51:26
news-image

அரசியல் பழிவாங்கலுக்காக எதிரணியினர் கைது செய்யப்படலாம்...

2025-01-16 16:43:57
news-image

ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கு முழுமையாக...

2025-01-16 22:20:40
news-image

அரசாங்கம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்...

2025-01-16 20:15:08
news-image

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட...

2025-01-16 21:00:00
news-image

சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நாட்டுக்கு...

2025-01-16 19:57:54
news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54