2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வாழ்க்கைச் செலவு 144 வீதத்தால் உயர்வு : தொகைமதிப்பு, புள்ளிவிபரவியல் திணைக்களம்

30 Mar, 2024 | 11:06 AM
image

(இராஜதுரை ஹஷான்)

நால்வரை கொண்ட குடும்பம் மாதமொன்றுக்கு உணவு மற்றும் உணவல்லாத அடிப்படை தேவைகளுக்காக  குறைந்தபட்சம் 68,056 ரூபா செலவிடுகிறது .

2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில்  இவ்வாழ்க்கை செலவு 144 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளன என்று தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாத மாவட்ட அடிப்படையிலான மதிப்பீட்டுக்கு அமைய கொழும்பு நகரில் வாழும் தனி நபர் ஒருவர் தனது அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு 18350 ரூபாவை செலவிட வேண்டியுள்ளதுடன் என திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதேபோல் மாவட்ட அடிப்படையிலான மதிப்பீட்டு தரப்படுத்தலுக்கு அமைய  (தனிநபர் ஒருவரின் அடிப்படை தேவைகளுக்கான குறைந்தபட்ச செலவு தொகை) கம்பஹா மாவட்டம்- 18256, களுத்துறை மாவட்டம்- 17860, கண்டி மாவட்டம் -17271, மாத்தளை மாவட்டம் -17247,நுவரெலியா மாவட்டம் -17892,காலி மாவட்டம் -17287,மாத்தறை மாவட்டம் -16616, அம்பாந்தோட்டை மாவட்டம் -16530,யாழ் மாவட்டம் -16604, மன்னார் மாவட்டம்- 17426,வவுனியா மாவட்டம் -16997,முல்லைத்தீவு மாவட்டம் -16894, மற்றும் கிளிநொச்சி மாவட்டம் -16437, மட்டக்களப்பு மாவட்டம் 17107,அம்பாறை மாவட்டம் -17150, திருகோணமலை மாவட்டம் -16577,குருநாகல் மாவட்டம் -16713, புத்தளம் மாவட்டம் -17368, அநுராதபுரம் மாவட்டம் -16604,பொலன்னறுவை மாவட்டம் -16648,பதுளை மாவட்டம் -17140,மொனராகலை மாவட்டம் - 16268, இரத்தினபுரி மாவட்டம் 17090,கேகாலை மாவட்டம் 17790. (மூலம் - தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்) 

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முன்னெடுக்கப்பட்ட மாவட்ட மட்டத்திலான மதிப்பீட்டின் படி தேசிய மட்டத்திலான மாத செலவு 17,014 ரூபா செலவாகுகிறது.

இந்த மதிப்பீட்டில் கொழும்பு மாவட்டத்தில் வாழும் தனிநபர் ஒருவரின் ஒருமாத செலவு உயர்வாகவும்,மொனராகலை மாவட்டத்தில் வாழ்பவரின் செலவு குறைவானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நான்கு உறுப்பினர்களை கொண்ட குடும்பம் ஒன்றின் உணவு மற்றும் உணவல்லாத தேவைகளுக்கு  மாதமொன்றுக்கு குறைந்தபட்சம் 68,056 ரூபா செலவாகுவதுடன்.2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாழ்க்கை செலவுகள் 144 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கு பின்னரான பொருளாதார பாதிப்பு, பணவீக்கம் உயர்வு உள்ளிட்ட காரணிகளினால் அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ளன.

கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் உணவு மற்றும் உணவல்லாத பணவீக்கம் கட்டம் கட்டமாக குறைவடைந்துள்ள நிலையிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையவில்லை.

ஆகவே பணவீக்கத்துக்கு அமைய வாழ்க்கை செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என புள்ளிவிபரவியல் திணைக்களம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்ணெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் கடந்த பெப்ரவரி மாதம் 5.9 சதவீதத்தில் இருந்து இந்த மாதம் (மார்ச்) 0.9  சதவீதத்துக்கு சடுதியாக குறைவடைந்துள்ளது.   

உணவல்லா பணவீக்கம் கடந்த பெப்ரவரி மாதம் 07.0 சதவீதமாக காணப்பட்ட நிலையில் இந்த மாதம் 0.5 சதவீதமாக குறைவடைந்துள்ளது. அதேபோல் உணவு பணவீக்கம் கடந்த மாதம் 3.5 சதவீதத்தில் இருந்து இந்த மாதம் 3.8 சதவீத்துக்கு உயர்வடைந்துள்ளது.

(மூலம் -இலங்கை மத்திய வங்கி) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37