இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் ; நால்வர் கைது

27 Mar, 2024 | 10:45 AM
image

பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கி தப்பிச்செல்ல முயன்ற 4 சந்தேக நபர்கள் வாள் மற்றும் தடியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இந்துருவ பகுதியைச் சேர்ந்த 19, 27, 28 மற்றும் 29 வயதுடையவர்களாவர்.

தாக்குதலுக்குள்ளான இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அளுத்கம பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை சோதனையிட முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முச்சக்கரவண்டியில் பயணித்த ஆறு பேருக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் சந்தேக நபர்கள் இந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது, சம்பவ இடத்தில் இருந்த சிலர் தாக்குதல் நடத்திய நான்கு சந்தேக நபர்களை சுற்றி வளைத்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் மேலும் இருவர் தப்பிச்சென்றுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16