பொதுத்தேர்தலை முதலில் நடத்தினால் சிறந்த அரசியல் நிலைமை தோற்றம் பெறும் - சாந்த பண்டார

Published By: Vishnu

26 Mar, 2024 | 10:45 PM
image

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதன்கிழமை (27) கூடவுள்ள பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும். நாட்டில் அரசியல் நிலைமை நன்மை பயக்கும் வகையில் அமைய வேண்டுமாயின் பொதுத்தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலப்படுத்தும் பணிகள் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது. கட்சியின் நிறைவேற்று சபை கூட்டம் புதன்கிழமை (27) கூடவுள்ளது.

நிறைவேற்று சபை கூட்டத்தில் மே தினம், புதிய அரசியல் கூட்டணி உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும்.மே தின கூட்டத்தை இம்முறை கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடத்த உத்தேசித்துள்ளோம். காலி முகத்திடல் மைதானத்தில் கூட்டத்தை நடத்த ஆரம்பத்தில் உத்தேசித்திருந்தோம். இருப்பினும் அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

நாட்டில் சிறந்த அரசியல் நிலைமை தோற்றம் பெற வேண்டுமாயின் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் வலிறுத்தியுள்ளார். பொதுத்தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்கள் தயாரில்லை என்று கருத முடியாது. இந்த ஆண்டு எந்த தேர்தல் இடம்பெற்றாலும் நாங்கள் வெற்றிப் பெறுவோம்.

தற்போதைய அரசியல் சூழலில் எந்த அரசியல் கட்சிகளுக்கும் வரையறையற்ற அதிகாரம் கிடைக்க கூடாது. பெரும்பான்மை அதிகாரம் ஒரு கட்சியை மையப்படுத்தியதாக காணப்படும் சூழலில் முரண்பாடுகள் மாத்திரமே தோற்றம் பெறும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!

2025-12-17 17:34:29
news-image

ஏறாவூரில் விடுதியில் தங்கியிருந்து போதைப்பொருள் விற்பனையில்...

2025-12-17 16:26:09
news-image

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை சார் முச்சக்கர...

2025-12-17 17:42:03
news-image

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரி,...

2025-12-17 15:43:07
news-image

அனர்தகால உதவிகளை மக்களுக்கு சென்றடைவதை அரச...

2025-12-17 17:31:21
news-image

சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமான நிகழ்வை...

2025-12-17 17:30:29
news-image

கிண்ணியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

2025-12-17 17:29:37
news-image

சட்டவிரோதமாக முதலைக் குட்டியை வைத்திருந்தவர் கைது!

2025-12-17 17:18:26
news-image

கொத்மலை - ரம்பொடை பகுதியில் மீட்கப்பட்டது...

2025-12-17 17:28:57
news-image

கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கத் தவறியமை நிர்வாகப்...

2025-12-17 17:11:28
news-image

அருட்தந்தை டொன் நிசாந்த சாகர ஜெயமன்ன...

2025-12-17 17:01:21
news-image

நாமலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞன்!

2025-12-17 15:24:48