(இராஜதுரை ஹஷான்)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதன்கிழமை (27) கூடவுள்ள பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும். நாட்டில் அரசியல் நிலைமை நன்மை பயக்கும் வகையில் அமைய வேண்டுமாயின் பொதுத்தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலப்படுத்தும் பணிகள் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது. கட்சியின் நிறைவேற்று சபை கூட்டம் புதன்கிழமை (27) கூடவுள்ளது.
நிறைவேற்று சபை கூட்டத்தில் மே தினம், புதிய அரசியல் கூட்டணி உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும்.மே தின கூட்டத்தை இம்முறை கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடத்த உத்தேசித்துள்ளோம். காலி முகத்திடல் மைதானத்தில் கூட்டத்தை நடத்த ஆரம்பத்தில் உத்தேசித்திருந்தோம். இருப்பினும் அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
நாட்டில் சிறந்த அரசியல் நிலைமை தோற்றம் பெற வேண்டுமாயின் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் வலிறுத்தியுள்ளார். பொதுத்தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்கள் தயாரில்லை என்று கருத முடியாது. இந்த ஆண்டு எந்த தேர்தல் இடம்பெற்றாலும் நாங்கள் வெற்றிப் பெறுவோம்.
தற்போதைய அரசியல் சூழலில் எந்த அரசியல் கட்சிகளுக்கும் வரையறையற்ற அதிகாரம் கிடைக்க கூடாது. பெரும்பான்மை அதிகாரம் ஒரு கட்சியை மையப்படுத்தியதாக காணப்படும் சூழலில் முரண்பாடுகள் மாத்திரமே தோற்றம் பெறும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM