பல்லினத்தன்மை, சமத்துவத்தை ஊக்குவிக்கும் உத்திகளை வணிகங்கள் வகுக்கவேண்டும் - உள்நாட்டு வணிக மேம்பாட்டை முன்னிறுத்திய புதிய ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டு

24 Mar, 2024 | 09:03 PM
image

(நா.தனுஜா)

இலங்கை வணிகங்கள் ஆக்கபூர்வமான விளைவுகளையும், சிறப்பான சமூக இணக்கத்தையும் அடைந்துகொள்ள விரும்பினால், அதற்கேற்றவாறான சமத்துவமானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான உத்திகளைத் தயாரிப்பதற்கு அவை எல்லைகளுக்கு அப்பால் சென்று சிந்திக்கவேண்டுமென இலங்கை ஐரோப்பிய வர்த்தக சம்மேளனத்தின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மனி வெளிவிவகார அலுவலகம் ஆகியவற்றின் நிதியுதவியின்கீழ் இலங்கை ஐரோப்பிய வர்த்தக சம்மேளனம் மற்றும் இலங்கையில் சமூக நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை வலுப்படுத்தல் அமைப்பு என்பன இணைந்து முன்னெடுத்த ஆய்வின் முடிவுகளை உள்ளடக்கி, 'பல்லினத்தன்மை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றின் ஆற்றலை வெளிக்கொணரல் வணிகங்களின் வெற்றி மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றில் பல்லினத்தன்மை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை என்பவற்றின் அவசியம்' எனும் தலைப்பிலான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

நாடளாவிய ரீதியில் 9 மாகாணங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 41 வணிகங்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதுடன், அதன் பிரதிகள் நிதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கார்மென் மொரெனோ ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கார்மென் மொரெனோ, 'அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் சமத்துவம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் நாமனைவரும் முக்கிய பங்காற்றவேண்டும். குறிப்பாக அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளையும் முடிவுக்குக்கொண்டுவருவதுடன், சமூகநீதியை மேம்படுத்தக்கூடியவாறான சட்டங்கள் மற்றும் கொள்கைகளை அரச கட்டமைப்புக்கள் உரியவாறு நடைமுறைப்படுத்தவேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா அழைத்தால் வொஷிங்டனுக்குச் சென்று எமது...

2025-01-14 14:29:52
news-image

துப்பாக்கி முனையில் யுவதியை கடத்திச் சென்ற...

2025-01-14 14:21:51
news-image

ஏறாவூரில் கிணற்றுக்குள் வீழ்ந்து 2 வயது...

2025-01-14 14:18:39
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று...

2025-01-14 14:17:38
news-image

நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக...

2025-01-14 14:18:27
news-image

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு...

2025-01-14 13:39:17
news-image

நவகமுவ பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2025-01-14 13:15:19
news-image

பமுனுகமவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது...

2025-01-14 13:06:21
news-image

பதுளையில் ரயிலில் மோதி ஒருவர் பலி!

2025-01-14 11:03:45
news-image

நீர்கொழும்பில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-01-14 10:50:53
news-image

அத்துருகிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர்...

2025-01-14 10:35:01
news-image

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு!

2025-01-14 10:24:58