(நா.தனுஜா)
இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் பொதுநலவாய முயற்சியாண்மை மற்றும் முதலீட்டுப் பேரவையின் வட்டமேசை கலந்துரையாடலில் பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம விளக்கமளித்துள்ளார்.
'பொதுநலவாய நாடுகள் - இலங்கை ஒத்துழைப்பை வலுப்படுத்தல்' எனும் தலைப்பில் கடந்த புதன்கிழமை லண்டனில் உள்ள பணிப்பாளர்கள் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வர்த்தகம் மற்றும் முதலீடுகள் தொடர்பான வட்டமேசை கலந்துரையாடலில் பொதுநலவாய முயற்சியாண்மை மற்றும் முதலீட்டுப் பேரவையின் அழைப்பின்கீழ் பங்கேற்றிருந்த பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம இலங்கையின் முதலீட்டு இயலுமை குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
பொதுநலவாய முயற்சியாண்மை மற்றும் முதலீட்டுப் பேரவை தலைவரின் அண்மைய இலங்கை விஜயம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பு ஆகியவற்றின் நீட்சியாகவே லண்டனில் இந்த வட்டமேசை கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சியானது நாட்டின் மீண்டெழும் தன்மையையும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் பாரிஸ் கிளப் நாடுகள் உள்ளிட்ட இருதரப்பு கடன்வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகளின் முனைப்பையும் காண்பிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், வரிச்சலுகைகள், சட்டக்கட்டமைப்பு, சட்டத்தின் ஆட்சி, முதலீட்டை இலகுபடுத்துவதற்கு இலங்கை முதலீட்டுச்சபை போன்ற கட்டமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் இலங்கையின் கேந்திரநிலைய முக்கியத்துவம் என்பன உள்ளடங்கலாக இலங்கையின் தற்போதைய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.
அதேபோன்று இலங்கையில் சுற்றுலா, உயர்கல்வி, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளிலும், கொழும்பு துறைமுக நகரத்திலும் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் பற்றியும் ரோஹித போகொல்லாகம எடுத்துரைத்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM