உயிர்த்த ஞாயிறுதாக்குதல்சூத்திரதாரிகள் - உண்மையை வெளியிட தயார் என்கின்றார் மைத்திரி

Published By: Rajeeban

22 Mar, 2024 | 05:08 PM
image

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களை யார் நடத்தியது என்ற உண்மையை இன்னமும் எவரும் கூறவில்லை. ஆனால் அத்தாக்குதல்களை நடத்தியது யார் என்பது எனக்குத் தெரியும். அதனை வெளிப்படுத்துமாறு நீதிமன்றம் எனக்கு உத்தரவு பிறப்பித்தால், நான் அதுபற்றி விபரங்களை வெளியிடுவேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

'தற்போது நாடும், நாட்டுமக்களும் மிகமோசமான நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றனர். இதிலிருந்து மீட்சியடையவேண்டுமெனில் ஜனாதிபதித்தேர்தலும், பொதுத்தேர்தலும் உரிய காலப்பகுதியில் நடத்தப்படவேண்டும். அதனையடுத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை முழுமையாக மீட்டெடுப்பதுடன், பொதுமக்கள் முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகளுக்கு உரியவாறான தீர்வை வழங்கவேண்டிய பொறுப்பை புதிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும்' என அவர் இதன்போது வலியுறுத்தினார்.

 

அதுமாத்திரமன்றி உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களை யார் நடத்தியது என்ற உண்மையை இன்னமும் எவரும் கூறவில்லை எனவும், ஆனால் அத்தாக்குதல்களை நடத்தியது யார் என்பது தனக்குத் தெரியும் எனவும் குறிப்பிட்ட அவர், அதனை வெளிப்படுத்துமாறு நீதிமன்றம் தனக்கு உத்தரவு பிறப்பித்தால் அவ்வுண்மையை வெளியிடத்தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

 

அதேவேளை அத்தகவலின் இரகசியத்தன்மையைப் பேணும் பொறுப்பு முற்றுமுழுதாக நீதிபதிகளுக்கே இருப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொலன்னாவை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க...

2025-01-22 17:10:47
news-image

சீனாவின் 500 மில்லியன் யுவான் நன்கொடை...

2025-01-22 20:50:37
news-image

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம்...

2025-01-22 20:22:05
news-image

சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின்...

2025-01-22 16:59:58
news-image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட...

2025-01-22 20:48:59
news-image

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

2025-01-22 17:00:41
news-image

உள்ளூராட்சி மன்றத்தேர்தலைத் தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம்...

2025-01-22 20:20:43
news-image

அஸ்வெசும என்பதன் தமிழாக்கம் என்ன ?...

2025-01-22 20:53:27
news-image

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரைவில் சரக்குக்...

2025-01-22 21:13:08
news-image

உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு

2025-01-22 21:07:01
news-image

தலைமைத்துவம், சின்னம் தொடர்பில் முரண்பட விரும்பவில்லை...

2025-01-22 20:55:56
news-image

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை...

2025-01-22 17:03:00