ஆற்று நீரை மறித்து விவசாயத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு திரியாய் விவசாயிகள் கோரிக்கை

11 Apr, 2024 | 01:00 PM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

கடலுடன் கலக்கும் ஆற்று நீரை மறித்து விவசாயத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இரு போகமும் நெற்செய்கை மேற்கொள்ள முடியும் என திரியாய் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திரியாய் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து, யான் ஓயாவின் கிளை ஆற்றை மறித்து, விவசாயம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண் மூடைகளை 15 அடி உயரத்துக்கு அடுக்கி, ஆற்று நீரை மடைமாற்றி சேமித்து, அதன் மூலம் 300 தொடக்கம் 350 ஏக்கரில் சிறுபோக நெற்பயிர்களை செய்கையிட திட்டமிட்டுள்ளனர். 

திரியாய் நீலபனிக்கன் விவசாய சம்மேளனத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் நீர் வசதியின்றி, தரிசு நிலங்களாக காணப்படுகின்றன. இவற்றுக்கான நீர் வசதி வழங்கப்படும் பட்சத்தில் அனைத்து நிலங்களிலும் நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபட முடியும் எனவும், கடந்த வருடம் இந்த ஆற்று நீரை மறித்து, சேமித்து 150 ஏக்கரில் விவசாயம் செய்ததாகவும் இந்த வருடம் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் சிறுபோக விவசாயம் செய்ய எதிர்பார்ப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

இப்பகுதியில் அணைக்கட்டை அமைத்து விவசாயம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இருபோகமும் விவசாயத்தை மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச...

2025-12-06 17:26:11
news-image

யாழ். நிலத்தடி நீரின் பாதுகாப்புக்கு இன்றியமையாத...

2025-12-06 15:39:21
news-image

மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள...

2025-12-06 16:43:18
news-image

மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும்...

2025-12-06 15:42:56
news-image

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு : மரணமடைந்த...

2025-12-06 15:34:58
news-image

71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் :...

2025-12-06 15:26:09
news-image

மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்தார் ஜனாதிபதி

2025-12-06 15:52:19
news-image

வெலிமடை- நுவரெலியா வீதி போக்குவரத்திற்காக மீண்டும்...

2025-12-06 15:22:43
news-image

7 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்க...

2025-12-06 15:19:56
news-image

டித்வா புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார்...

2025-12-06 13:56:32
news-image

தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை...

2025-12-06 14:03:54
news-image

நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறுகின்றது !

2025-12-06 13:08:58