ஆற்று நீரை மறித்து விவசாயத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு திரியாய் விவசாயிகள் கோரிக்கை

11 Apr, 2024 | 01:00 PM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

கடலுடன் கலக்கும் ஆற்று நீரை மறித்து விவசாயத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இரு போகமும் நெற்செய்கை மேற்கொள்ள முடியும் என திரியாய் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திரியாய் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து, யான் ஓயாவின் கிளை ஆற்றை மறித்து, விவசாயம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண் மூடைகளை 15 அடி உயரத்துக்கு அடுக்கி, ஆற்று நீரை மடைமாற்றி சேமித்து, அதன் மூலம் 300 தொடக்கம் 350 ஏக்கரில் சிறுபோக நெற்பயிர்களை செய்கையிட திட்டமிட்டுள்ளனர். 

திரியாய் நீலபனிக்கன் விவசாய சம்மேளனத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் நீர் வசதியின்றி, தரிசு நிலங்களாக காணப்படுகின்றன. இவற்றுக்கான நீர் வசதி வழங்கப்படும் பட்சத்தில் அனைத்து நிலங்களிலும் நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபட முடியும் எனவும், கடந்த வருடம் இந்த ஆற்று நீரை மறித்து, சேமித்து 150 ஏக்கரில் விவசாயம் செய்ததாகவும் இந்த வருடம் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் சிறுபோக விவசாயம் செய்ய எதிர்பார்ப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

இப்பகுதியில் அணைக்கட்டை அமைத்து விவசாயம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இருபோகமும் விவசாயத்தை மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24
news-image

வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்...

2025-02-08 15:46:12
news-image

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு மாத...

2025-02-08 16:04:02
news-image

கொழும்பு - வெல்லவாய வீதியில் விபத்து...

2025-02-08 15:43:57
news-image

இராமகிருஷ்ண மிஷனின் கிளை திங்கள் கொட்டகலையில்...

2025-02-08 14:51:08
news-image

மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை :...

2025-02-08 15:49:12
news-image

குருணாகலில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-08 15:58:20