160 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம்

20 Mar, 2024 | 09:24 PM
image

நாட்டு மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதற்காக வீரத்துடனும் விவேகத்துடனும் செயற்பட்டு 160 வருட பொலிஸ் வரலாற்றில் தங்கள் உயிர்களை நீத்த பொலிஸ் வீரர்களின் ஞாபகார்த்த தினம் இன்றாகும். 

'தர்மமாக செயற்படுபவன் தர்மத்தினால் காப்பாற்றப்படுவான்' எனும் தொனிப்பொருளில் கீழ் இயங்கும் பொலிஸ் சேவையானது நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக அர்பணித்து அன்றும் இன்றும் தன்  உயிரை தியாகம் செய்த வீரர்களின் ஞாபகார்த்த 

தினமான வியாழக்கிழமை (21) நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளிலும் காலை 8 மணிக்கு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1864 ஆம் ஆண்டு மாவனெல்ல, உதுவன்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையின் போது  சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 21 ஆம் திகதி பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

பொதுமக்களின் ஜனநாயக உரிமை, பாதுகாப்பு ,வன்முறை தடுப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு, சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக பல சந்தர்ப்பங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது உயிர்களை அர்பணித்துள்ளனர் என்பதுடன் தமது குடும்ப உறுப்பினர்களின் உயிர்களையும் அர்பணித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே 30 வருட கால யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினர் அதிகளவானோர் உயிர் நீத்துள்ளனர்.

தனது உயிரை துச்சமாக கருதி கடமையை சரிவர நிறைவேற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் கௌரவத்துடன் போற்றக்கூடியவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இதனிடையே பொலிஸ் வீரர்கள் தினத்தை முன்னிட்டு கடமையின் போது உயிர்நீத்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வு  பம்பலப்பிட்டி பொலிஸ் படை தலைமையகத்தில்  பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 76...

2025-03-23 09:53:51
news-image

சீனத் தூதுவரின் இல்லத்தில் ரணிலுக்கு இராப்போசனம்

2025-03-23 09:13:17
news-image

பிரதமர் மோடியின் விஜயத்திற்கு முன்னர் அமெரிக்கா...

2025-03-23 10:13:03
news-image

இன்றைய வானிலை

2025-03-23 06:35:51
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19