சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள மத்திய வங்கிக்கு எத்தகைய தார்மீக உரிமையும் இல்லை : சஜித்

20 Mar, 2024 | 02:16 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசியல் தலையீடுகள் மற்றும் நாட்டின் நிதிக்கொள்கை குடும்பமயமாவதில் இருந்து தடுப்பதற்கே மத்திய வங்கியை சுயாதீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் அதனை பயன்படுத்திக்கொண்டு மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை 70வீதம் வரை அதிகரித்துக்கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் நிதிக் கொள்கையை அரசியல் ரீதியிலான தலையீடுகள் இன்றி  நடைமுறைப்படுத்துவதற்காகவே மத்திய வங்கியை சுயாதீனப்படுத்தும் புதிய சட்டங்கள்  கொண்டு வரப்பட்டன.

தொடர்ச்சியாக பணத்தை அச்சடித்து இந்நாட்டில் பணவீக்கத்தை ஊக்குவித்ததன் காரணமாக இந்நாட்டின் நிதிக்கொள்கை குடும்பமயமானது. எனவேதான் இதனை சுயாதீன கட்டமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இவ்வாறான நிலையில், மத்திய வங்கி, நாட்டில் பாரிய நிதி நெருக்கடி இருப்பதென தெரிவித்து  தனியார் மற்றும் அரச ஊழியர்களுக்கு தியாகங்களை செய்யுமாறு கோரிக்கை விடுத்து, மறுபுறம் மத்திய வங்கி ஊழியர்களுக்கு 70 வீத சம்பள உயர்வை பெற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறு செயற்பட மத்திய வங்கிக்கு எத்தகைய தார்மீக உரிமையும் இல்லை. 

மத்திய வங்கியை  குடும்பமயமாவதில் இருந்து சுயாதீனப்படுத்தி, அரசியல் தலையீடுகளை நிறுத்துவதற்காகும். ஆனால் அதனை பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு தேவையான முறையில் சம்பளத்தை அதிகரித்துக்கொள்ள மத்திய வங்கிக்கு உரிமை இல்லை.

அதனால் மத்திய வங்கி தங்களின் ஊழியர்களுக்கு அநியாயமான முறையில் அதிகரித்துள்ள சம்பளத்தை மீள திருப்பிக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர்...

2025-01-15 14:33:19
news-image

சிகிரியா இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக...

2025-01-15 14:25:36
news-image

தொடங்கொடை துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் வெளியான...

2025-01-15 14:23:57
news-image

மட்டக்களப்பில் தொடர் மழையால் வயல் நிலங்கள்...

2025-01-15 13:41:27
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த "பியுமா"...

2025-01-15 12:52:44
news-image

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'வெலேசுதா' உட்பட...

2025-01-15 12:57:59
news-image

இலங்கையின் முன்னணி வயலின் இசைக் கலைஞர்...

2025-01-15 13:52:05
news-image

இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின்...

2025-01-15 12:30:02
news-image

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான்...

2025-01-15 12:20:40
news-image

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபக தலைவர்...

2025-01-15 12:23:16
news-image

லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் ஒருவர்...

2025-01-15 11:49:14
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-01-15 11:47:55