கொழும்பு கோட்டை மற்றும் கொம்பஞ்ஞ வீதி ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று மாலை ரயில் தடம் புரண்டதன் காரணமாக கரையோர மார்க்கத்தில் ரயில் சேவையில் தாமதம் தொடர்வதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளதாவது,
கொழும்பு கோட்டையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி நேற்று (19) இரவு 7.15 மணி அளவில் பயணித்த அதிவேக ரயில் கோட்டை மற்றும் கொம்பஞ்ஞ வீதி ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது.
ரயில் தடம் புரண்டதன் காரணமாக நேற்றிரவு காலி அஞ்சல் ரயில் உட்பட 4 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது ரயில் போக்குவரத்திற்காக ஒரு மார்க்கம் திறக்கப்பட்டுள்ளது, மற்றைய மார்க்கத்தில் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM