வடக்கில் வதைமுகாம் இருப்பதாக கூறப்படும் கட்டுக்கதைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. வெறுமனே முட்கம்பிகளை வைத்து பாதுகாப்பு முகாமை வதைமுகாமாக கணிக்க முடியாது என இராணுவ ஊடகப் பேச்சாளர்பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.
ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்பில் அதி தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போது வலிகாமம் வடக்கில் புதிதாக வதைமுகாம் ஒன்று இருபதாக செய்திகள் வெளிவந்துள்ளமை மற்றும் ஐ.எஸ்.பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
வடக்கில் யுத்த காலகட்டத்தில் இராணுவ வதை முகாம்கள் இயங்கியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த காலத்தில் அவ்வாறான ஒருசில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் நிரூபிக்கக்கூடிய வகையில் எவ்வித ஆதாரங்களும் இருக்கவில்லை. அதேபோல் இப்போதும் வலிகாமம் வடக்கில் அவ்வாறான ஒரு வதை முகாம் இருந்ததாகவும் அந்த முகாமில் முட்கம்பி மூலமாக அறைகள் நிர்மாணிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால் இந்த முகாம் வதை முகாம் அல்ல. வலிகாமம் வடக்கில் இருந்த முகாம் பாதுகாப்பு முகாம் மட்டுமேயாகும்.
அதேபோல் முட்கம்பி அமைத்து முகாமை பாதுகாத்தது புலிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவேயாகும். ஆகவே வெறும் முட்கம்பிகளை வைத்து பாதுகாப்பு முகாமை வதை முகாமாக சித்தரிப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வடக்கில் இருக்கும் ஏனைய முகாம்கள் தொடர்பிலும் ஆதராம் இல்லாது முன்வைக்கப்படும் குற்றசாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
நாட்டில் புதிதாக ஐ.எஸ். பயங்கரவாத நடவடிக்கைகள் பரவிவருகின்ற ஒரு அச்சுறுத்தல் காணப்படுகின்றது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்த நாட்டில் செயற்படுவதாக வெ ளி வரும் தகவலுக்கு அமைய புலனாய்வு பிரிவினர் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய பாதுகாப்பு விடயத்தில் நாம் மிகவும் அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம். முப்படைகளும், காவல் துறையும் மிகவும் அவதானமாக இந்த அச்சுறுத்தலை கையாண்டு வருகின்றது.
எனினும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்பில் புலனாய்வு தகவல்களை ஊடகங்கள் வெளிப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.காரணம் என்னவெனில் நாம் மேற்கொள்ளும் இந்த விசாரணைகள் மிகவும் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் இப்போது இவ்வாறான தகவல்களை வெ ளியிட்டார்.
அவர்களின் செயற்பாடுகளை அவதானிக்க கடினமாகிவிடும். அதேபோல் சர்வதேச நாடுகளுடன் இவர்கள் செயற்படும் தொடர்புகளும் துண்டிக்கப்படும். அவ்வாறு இருக்கையில் எம்மால் சரியாக இந்த செயற்பாடுகளை அவதானித்து கண்டறியமுடியாது போய்விடும்.
எவ்வாறு இருப்பினும் இப்போது நிலவும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் எவ்வித அச்சமும் சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. பாதுகாப்பு படையினருக்கு கிடைக்கப்பெறும் புலனாய்வு தகவல்கள் மிகவும் அவதானமாக ஆராயப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM