அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதி பிரதான வீதியோரங்களில் வெள்ளரிப்பழம் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. மக்களும் ஆர்வமாக வெள்ளரிப்பழங்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, காரைதீவு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் வெள்ளரிப்பழம் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதை காண முடிகிறது.
கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியோரங்களில் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழங்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள உடல் உஷ்ணத்தை தணிக்கும் பொருட்டு வெள்ளரிப்பழங்கள் சாப்பிடுவதில் மக்கள் அதிக நாட்டம் கொண்டு வருகின்றனர்.
மேலும், அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்துக்கு சிறந்த கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன், இப்பழங்கள் சுமார் 300 - 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வகைப் பழங்களின் விளைச்சல் பெரும்பாலும் வெப்பமான காலங்களிலேயே அதிகமாக இடம்பெறுகிறது.
குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக செய்கையிடப்பட்டு, அறுவடை செய்யப்பட்டு, ஏனைய ஊர்களுக்கு வெள்ளரிப்பழங்கள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.
மேலும், கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியில் இளநீர், தோடை, குளிர்பானம் செய்யும் விற்பனை நிலையங்கள் அதிகமாக காணப்படுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM