ஜனாதிபதித் தேர்தலை காலம் தாழ்த்துவது எவ்வாறு என்பதையே ரணிலும் பஷிலும் பேசியிருப்பர் - எதிர்க்கட்சி சாடல்

15 Mar, 2024 | 05:45 PM
image

(எம்.மனோசித்ரா)

விடுமுறைக்காக நாடு திரும்பியுள்ள பஷில் ராஜபக்ஷவுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

எவ்வாறு ஜனாதிபதித் தேர்தலை காலம் தாழ்த்தி, பொதுத் தேர்தலை முன்னரே நடத்தலாம் என்பது தொடர்பில் இவர்கள் திட்டமிட்டிருக்கக் கூடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

விடுமுறைக்காக நாடு திரும்பியுள்ள பஷில் ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். ரணில் - ராஜபக்ஷ அரசாங்கத்தை எவ்வாறு தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பிலேயே இவர்கள் பேசியுள்ளனர்.

மக்களே தவறிழைத்தனர் என்றும், அதற்கு அவர்களே பொறுப்பு கூற வேண்டும் என்றும் பஷில் ராஜபக்ஷ தொடர்ந்தும் கூறிவந்தார். எதிர்காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவும் இதனையே கூறுவார். தற்போது பாராளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என்று பஷில் தெரிவித்துள்ளார். ஆனால் அரசியலமைப்பின் படி ஜனாதிபதித் தேர்தலே முதலில் இடம்பெற வேண்டும்.

எவ்வாறிருப்பினும் எந்த தேர்தலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே உள்ளது. பொதுஜன பெரமுனவும், ஐ.தே.க.வும் இணைந்தால் மாத்திரமே அவர்களால் பாராளுமன்றத்தில் ஓரளவேனும் ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். முன்னர் மறைமுகமாக செய்தவற்றை இன்று பகிரங்கமாக செய்கின்றனர்.

பாராளுமன்றத்தில் 134 பேர் வாக்களித்து ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கினர். ஆனால் இன்று அவர்கள் இந்த அரசாங்கம் எம்முடையதல்ல என்கின்றனர். ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கிவிட்டு அவர்களால் இவ்வாறு பொறுப்புக்கூறலிலிருந்து விலக முடியாது.

மக்கள் ஆணைக்கு முக்கியத்துவமளிக்க வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது. எனவே செலவுகளைக் குறைப்பதற்காக ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டையும் ஒரே தினத்தில் நடத்தினால் கூட அதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13
news-image

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம்...

2025-01-14 19:38:19
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது குறித்து...

2025-01-14 14:25:47
news-image

அம்பாறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

2025-01-14 19:23:03
news-image

ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்...

2025-01-14 19:03:31
news-image

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல்

2025-01-14 19:06:02
news-image

கிளிநொச்சியில் காயமடைந்த யானை உயிரிழப்பு

2025-01-14 19:15:00