இலங்கை இராணுவத்துக்கு நேர்மறை மீள்வரைவிலக்கணம் வழங்குகிறதா அமெரிக்கா? - சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் விமர்சனம்

Published By: Digital Desk 3

15 Mar, 2024 | 08:59 AM
image

(நா.தனுஜா)

'குறைந்தபட்சம் பகுதியளவிலான பொறுப்புக்கூறலையேனும் உறுதிசெய்யவேண்டிய நிலையில் இருக்கும் பிரச்சினைக்குரிய கட்டமைப்பு' எனும் நிலையிலிருந்து தற்போது 'இந்திய - பசுபிக் பிராந்திய கடற்பாதுகாப்பில் மிகமுக்கிய பங்காளி' எனும் நிலையை நோக்கி அமெரிக்கா இலங்கை இராணுவத்துக்கு மீள்வரைவிலக்கணம் வழங்குவதாக சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் விமர்சித்துள்ளார்.

இலங்கையின் கடற்பிராந்தியம்சார் விழிப்புணர்வு மற்றும் இயலுமையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம், கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகம் மற்றும் இலங்கை விமானப்படை என்பன இணைந்து இம்மாதம் 12 - 14 ஆம் திகதி வரை இரத்மலானையில் அமைந்துள்ள இலங்கை விமானப்படைத்தளத்தில் கண்காணிப்பு விமானங்களின் முன்னோட்டமொன்றை நடாத்தியிருந்தன.

இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், இலங்கையின் கடற்பிராந்திய வளப்பாதுகாப்பை விரிவுபடுத்தல், சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை முறியடித்தல், தனித்துவம் வாய்ந்த பொருளாதார வலயத்தைக் கண்காணித்தல் மற்றும் கடற்பிராந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகியவற்றுக்கு உதவக்கூடியவகையில் நடாத்தப்பட்ட முன்னோட்டத்தின்போது அமெரிக்காவுக்குச் சொந்தமான விமானத்தில் தானும் பறந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 

அதேபோன்று மனிதாபிமான உதவிகள், அனர்த்தங்களின்போது உதவிகளை வழங்கல், கடற்பிராந்தியப்பாதுகாப்பு ஆகிய விடயங்களில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதை முன்னிறுத்தி அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயலாற்றிவருவதாகவும் அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அமெரிக்கத்தூதுவரின் எக்ஸ் தளப்பதிவை மேற்கோள்காட்டிப் பதிவிட்டுள்ள சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன், 'குறைந்தபட்சம் பகுதியளவிலான பொறுப்புக்கூறலையேனும் உறுதிசெய்யவேண்டிய நிலையில் இருக்கும் பிரச்சினைக்குரிய கட்டமைப்பு எனும் நிலையிலிருந்து தற்போது இந்திய - பசுபிக் பிராந்திய கடற்பாதுகாப்பில் மிகமுக்கிய பங்காளி எனும் நிலையை நோக்கி இலங்கை இராணுவத்துக்கு அமெரிக்கா மீள்வரைவிலக்கணம் வழங்குவதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கின்றது' என விமர்சித்துள்ளார்.

அதேவேளை அமெரிக்கா போர்க்குற்றவாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் வெளியிடப்பட்ட புத்தகத்தில் 'எமது அரசாங்கத்துக்கு எதிராக வெளியக சக்திகள் செயற்பட்டன' எனக் கூறப்பட்டிருப்பது உண்மை என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ளமுடிகின்றது எனவும் மேலும் சில சமூகவலைத்தளப் பயனாளர்கள் இதனை விமர்சித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மித்தெனியவில் துப்பாக்கிப் பிரயோகம் : தந்தையும்...

2025-02-19 07:15:06
news-image

இன்றைய வானிலை

2025-02-19 06:14:57
news-image

எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50...

2025-02-18 17:19:21
news-image

நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது சந்தர்ப்பத்தை அரசு...

2025-02-18 18:58:04
news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

2025-02-18 17:24:08
news-image

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும்...

2025-02-18 19:01:44
news-image

எமது அரசாங்கத்தின் தொடர்ச்சியே அநுரவின் வரவு...

2025-02-18 17:20:44
news-image

மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கிய 5 ஆயிரம்...

2025-02-18 19:03:26
news-image

வடக்குக்கு தவிர ஏனைய மாகாணங்களுக்கு பாரிய...

2025-02-18 19:05:16
news-image

வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை...

2025-02-18 20:12:13