இலங்கை தமிழ் அரசுக் கட்சி கிளைகள் புலம்பெயர் தேசத்தில் உருவாக்க அனுமதி  வழங்கப்படவில்லை - தமிழரசுக்கட்சி பொதுச் செயலாளர் தெரிவிப்பு

Published By: Vishnu

14 Mar, 2024 | 08:23 PM
image

இலங்கை தமிழ் அரசுக் கட்சி கிளைகள் புலம்பெயர்தேசத்தில் உருவாக்க அனுமதி வழங்கப்படவில்லை என தமிழரசுக்கட்சி பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளைகள் வடக்கு, கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக செயற்பட்டுவருகிறது. 

அதேவேளை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமை பெற்றவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் புலம்பெயர் நாடுகளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் செயற்பாடுகளிற்கு ஆதரவாகத் தனியாகவும் தம்மை நிறுவனமயப்படுத்தியும் அந்நாட்டு சட்ட வரம்புகளை கடைப்பிடித்து செயற்பட்டு வருகிறார்கள்.

அவர்களின் தாயக மக்கள்மீதான அக்கறையை எமது கட்சி என்றும் மதித்து செயற்பட்டுவந்துள்ளது.

அவர்கள் பல மக்கள் நலத்திட்டங்களை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கும், இயற்கை பேரிடர்களின்போதும் பெருந்தொற்றுக்கு எமது மக்கள் முகம்கொடுத்தபோதும் மற்றும் கல்வி, சுகாதாரம், பொருளாதார மேம்பாடு போன்ற செயற்திட்டங்களிலும் நேரடியாகவும் எமது கட்சி உறுப்பினர்களூடாகவும் பல வருடங்களாக செயற்பட்டு வருகிறார்கள். அதற்கு எமது மக்கள் சார்பாக நன்றியுடையவர்களாக உள்ளோம். எமது கட்சியின் கொள்கைகளை ஏற்று இணைந்து செயற்பட விரும்பும் புலம்பெயர் உறவுகளுடன் செயற்படக் கட்சி ஆயத்தமாக உள்ளது.

கடந்த சில நாட்களிற்கு முன் ஐக்கிய ராட்சியதில் இலண்டன் நகரில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளை அமைக்கப்பட்டதாக சில பத்திரிகை மற்றும் இணையத்தளங்களிலும் வேறுசிலவற்றில் “இலங்கை தமிழ் அரசுக் கட்சி போரம்”( ITAK FORUM) அமைக்கப்பட்டதாகவும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது. 

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கே உண்டு. இலங்கைக்கு வெளியே எமது கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான எந்த அனுமதியும் இதுவரை இலங்கை தமிழ் அரசுக் கட்சியால் வழங்கப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-13 06:05:42
news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55