யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் கடத்தப்பட்டு, உயிரிழந்த இளம் குடும்பஸ்தரை சித்திரவதைக்கு உட்படுத்தியே படுகொலை செய்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்த கணவன், மனைவி இருவரையும் பொன்னாலை பாலத்துக்கு அருகில் இரண்டு வாகனங்களில் காத்திருந்த வன்முறை கும்பல் கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்திச் சென்றவர்கள் கணவனை தாக்கி படுகாயங்களை ஏற்படுத்திய நிலையில் வைத்தியசாலைக்கு முன்பாக வீசிச் சென்றிருந்தனர். மனைவியை சித்தங்கேணி பகுதியில் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
படுகாயங்களுடன் விட்டுச் செல்லப்பட்ட கணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் உடற்கூற்று பரிசோதனைகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (12) யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, உயிரிழந்த நபரின் உடல்களில் வெட்டுக்காயங்கள், கூரிய ஆயுதங்களால் குத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கிய காயங்கள் ஏற்பட்டதாலும், மூச்சுக் குழாய்க்குள் இரத்தம் சென்றதாலுமே மரணம் நேர்ந்துள்ளது என உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM