சிட்னியிலிருந்து அவுக்லாண்டிற்கு சென்றுகொண்டிருந்த லட்டாம் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து விமானத்திற்குள் காணப்பட்ட நிலைமை குறித்து தெரிவித்துள்ள பயணிகள் பூகம்பம் போல உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை பகல் 263 பயணிகள் மற்றும் ஒன்பது விமானப்பணியாளர்களுடன் நியுசிலாந்தின் அவுக்லாண்டை நோக்கி புறப்பட்ட லட்டாம் எயர்லைன்ஸ் தனது மூன்றரை மணிநேர பயணத்தின் இடையில் கடுமையான குலுங்கியது என்பது விமான கண்காணிப்பு தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
தொழில்நுட்ப கோளாரே இதற்கு காரணம் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்துள்ள லட்டாம் எயர்லைன்ஸ் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது.
விமானம் நியுசிலாந்தில் தரையிறங்கியதும் விமானி கடும் அதிர்ச்சியில் சிக்குண்டிருந்தார் என பயணிகள் தெரிவித்துள்ளனர்.
சிறிதுநேரம் விமானத்தை செலுத்தும் திறன் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார் எனவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் ஒரு செகன்ட் கீழே விழத்தொடங்கியது என பயணிகள் தெரிவித்துள்ளனர்.
மதிய உணவு வழங்குவது முடிவடைந்து சில நிமிடங்களின் பின்னர் விமானம் கீழே விழத்தொடங்கியது என நியுசிலாந்தை சேர்ந்த பயணியொருவர் தெரிவித்துள்ளார்.
அவ்வேளையே தான் தனது ஆசனப்பட்டியை அணிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு செகன்டில் இது இடம்பெற்றது அதுமிகவும் வேகமான விதத்தில் குலுங்க தொடங்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விமானம் மிகவும் அமைதியான முறையில் பயணித்துக்கொண்டிருந்தது விமானிகள் எச்சரிக்காமலே இது இடம்பெற்றது எல்வூட் தெரிவித்துள்ளார்.
அது மிகவும் வேதனையான அனுபவம் பயணிகள் மற்றும் விமானப்பணியாளர்கள் காயமடைந்தனர் இரத்தம் வெளியேறியது ஏனையவர்கள் அதிர்ச்சியில் சிக்குண்டிருந்தனர் எனவும் எல்வூட் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து நியுசிலாந்தின் அவுக்லாண்ட்டிற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
லட்டம் எயர்லைன்ஸ் விமானத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது இதனால்; விமானம் தடுமாறத்தொடங்கியது என லட்டம் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
விமானம் அவுக்லாண்டில் தரையிறங்கியதும் பயணிகள் தயார் நிலையில் நின்ற அம்புலன்ஸில் அவசரஅவசரமாக ஏற்றப்பட்டனர்.
எங்கள் அம்புலன்ஸ் சேவையை சேர்ந்தவர்கள் பயணிகளை உடனடியாக மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தினர் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ஒருவர் கடுமையாக பாதி;க்கப்பட்டுள்ளார் என ஹட்டோ ஹோன் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.
13 பயணிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM