(இராஜதுரை ஹஷான்)
புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் 10 ஆண்டுகளுக்கு குறைவான காலப்பகுதியில் வசிப்பவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும். 10 வருடங்களுக்கு மேல் வசிப்பவர்களிடமிருந்து காணி வரி அறவிடப்படும் என போக்குவரத்து, ஊடகத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் அந்த புகையிரத நிலையத்தின் சேவையாளர்கள் மீது தவறேதும் கிடையாது. அவர்கள் தங்களின் அடிப்படை கடமையை நிறைவேற்றியுள்ளார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் வணிக உப காரியாலயத்தை திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இலங்கை புகையிரத வரலாற்றை மாற்றியமைக்கும் தருணத்தில் தற்போது உள்ளோம். புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமான முறையில் 10 வருடங்களுக்கு அதிகமான காலப்பகுதியில் வாழ்பவர்களுக்கு காணி வரி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் வாழ்பவர்கள் அந்த காணிகளில் விவசாயம், கைத்தொழில் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இவர்கள் புகையிரத திணைக்களத்துக்கு வரி செலுத்துவதில்லை. ஆகவே இவர்களிடமிருந்து காணி வரி முறையாக அறவிடப்படும்.இந்த காணிகள் அவர்களுக்கு ஒருபோதும் சொந்தமாக வழங்கப்பட மாட்டாது. நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்படும்.
புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமான முறையில் 10 வருடங்களுக்கு குறைவான காலப்பகுதியில் வாழ்பவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும். ஆகவே இவ்வாறானவர்கள் புகையிரத திணைக்களத்துக்கு வருகை தந்து மதிப்பீடு தொடர்பில் மேன்முறையீடு செய்துக் கொள்ள வேண்டும்.
நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணை முன்னெடுக்கப்பட்டு அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நாவலப்பிட்டி புகையிரத நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சேவையாளர்கள் மீது தவறேதும் கிடையாது.
மதுபோதையில் புகையிரதத்தில் பயணித்த இந்த சுற்றுலா பயணிகள் புகையிரத சேவைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளார்கள். இதன்போது ஏனைய பயணிகளின் நலனை கருத்திற் கொண்டு அவர்கள் புகையிரதத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஆகவே நாவலப்பிட்டி புகையிரத நிலைய சேவையாளர்கள் தமது அடிப்படை கடமையை நிறைவேற்றியுள்ளார்கள் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM