வவுனியா பல்கலையில் ஆய்வு மாநாடு நாளை ஆரம்பம்

06 Mar, 2024 | 10:02 PM
image

'சமாதானம், ஜனநாயகத்துக்கான செயற்கை தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றம்' எனும் தலைப்பில் வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாநாடு நாளை (07) ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (06) இடம்பெற்றது.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த ரி.மங்களேஸ்வரன்,

வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் ஆசிய பசுபிக் சமாதான ஆராய்ச்சி அமைப்பும் இணைந்து “சமாதானம் மற்றும் ஜனநாயகத்துக்கான செயற்கை தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றம்” என்ற தலைப்பில் இம்முறை ஆய்வு மாநாட்டை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

இதில் 250க்கும் மேற்பட்ட கல்வியியலாளர்களும் ஆராய்ச்சியாளர்களும், நல்லிணக்கத்துறையில் சிறப்புத்தேர்ச்சி பெற்றவர்களும், ஊடக மற்றும் தொழில்நுட்ப புலமையாளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். 

இங்கு சர்வதேச நாடுகளை சேர்ந்த புலமையாளர்களின் 200க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், கலாசாரம் மற்றும் சமாதானத்துக்கான மருத்துவ ரீதியான போக்கு, சமாதானம் மற்றும் ஜனநாயகத்துக்கான செயற்கை தொழில்நுட்பம், சமாதானத்துக்கான கல்வியும் அதன் சவால்களும் என்ற தலைப்பில் குழுக் கலந்துரையாடல்களும் இடம்பெறும். 

இந்த மாநாடானது நாளைய தினம் ஆரம்பமாகி தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடம்பெறும். இம்மாநாட்டில் நல்லிணக்கம் தொடர்பாக சர்வதேச புலமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம்  ஒரு நாட்டில் எவ்வாறு சமாதானம் மற்றும் நல்லுறவை ஏற்படுத்த முடியும் என்ற அவர்களது அனுபவங்களையும் பகிரவுள்ளனர்.

எனவே, இந்த மாநாட்டின் ஊடாக அது தொடர்பான தெளிவினை பெற்றுக்கொள்ள முடியும். இந்த விடயத்தில் அக்கறை உடையவர்களை மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைத்து நிற்கின்றோம் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - சவூதி இடையிலான இருதரப்பு...

2025-11-10 16:37:24
news-image

முல்லைத்தீவில் கரையோர மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி

2025-11-10 18:47:36
news-image

கணக்காய்வாளர் நாயகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த...

2025-11-10 18:52:51
news-image

அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காக ஆசிரியர்கள் டிசம்பரில்...

2025-11-10 18:22:43
news-image

கரடியனாறு பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி...

2025-11-10 18:12:42
news-image

ஐ.தே.கவின் அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதி பொதுச்...

2025-11-10 18:01:43
news-image

ஏறாவூரில் வாள்களுடன் பெண் கைது

2025-11-10 17:07:20
news-image

புத்தல - மொனராகலை பிரதான வீதியில்...

2025-11-10 17:01:40
news-image

கஞ்சா வியாபாரி கைது!

2025-11-10 18:05:14
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை...

2025-11-10 16:54:00
news-image

இலங்கை - சவூதி அரேபியாவுக்கு இடையேயான...

2025-11-10 17:33:54
news-image

11 இந்திய மீனவர்கள் கைது!

2025-11-10 16:35:49