(நெவில் அன்தனி)
குஜராத் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு, எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் 25 ஓட்டங்களால் வெற்றியீட்டிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணி புள்ளிகள் நிலையில் முதலாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அணித் தலைவி மெக் லெனிங் குவித்த அரைச் சதம், ஜெஸ் ஜோனாசன், ராதா யாதவ் ஆகிய இருவரின் துல்லியமான பந்துவீச்சகள் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.
மெக் லெனிங் 55 ஓட்டங்ளையும் அலிஸ் கெப்சி 27 ஓட்டங்களையும் அனாபெல் சதலண்ட் 20 ஓட்டங்களையும் ஷிக்கா பாண்டி ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மெக்னா சிங் 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
ஏஷ்லி காட்னர் மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 40 ஓட்டங்களைப் பெற்றார்.
குஜராத் ஜயன்ட்ஸின் மொத்த எண்ணிக்கையில் 17 உதிரிகள் இரண்டாவது அதிகப்பட்ச எண்ணிககையாக இருந்தது.
பந்துவீச்சில் ராதா யாதவ் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெஸ் ஜோனாசன் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகி: ஜெஸ் ஜோனாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM