வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று (03) காலை சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியினை வழிமறித்த போக்குவரத்து பொலிஸார் ஊர்தியின் சாரதியை கைது செய்ய முயற்சித்தமையால் அவ்விடத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
சாந்தனின் உடல் இன்று காலை வவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதன்போது சாந்தனின் உடலை தாங்கிய ஊர்தி வவுனியா பழைய பேருந்து நிலையத்தினுள் நுழைந்தது.
அவ்வேளை, அங்கு கடமையில் இருந்த பொலிஸார் ஊர்தி அருகே சென்று ஊர்தியினை இவ்விடத்தில் தரித்து நிறுத்த முடியாது. அவ்வாறு தரித்து நிறுத்தினால் சாரதியினை கைது செய்வோம் என கூறியுள்ளனர்.
அத்தோடு, வாகன சாரதியினையும் வாகனத்தினை விட்டு கீழே இறங்குமாறு தெரிவிக்க, அவ்விடத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
அதன் பின்னர், ஊர்வல ஏற்பாட்டுக் குழுவினர் பழைய பேருந்து நிலையத்திலுள்ள வாகன தரிப்பிடத்தில் ஊர்தியினை தரித்து நிறுத்தி அஞ்சலி நிகழ்வினை நடத்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM