தமிழ் சமூகத்துக்கான நீதி, சமாதானம், சுபீட்சமான எதிர்காலத்தை முன்னிறுத்தி தொடர்ந்து இயங்குவேன் - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் விலி நிக்கேல் உறுதி

03 Mar, 2024 | 12:44 PM
image

(நா.தனுஜா)

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் என்ற ரீதியில் தமிழ் சமூகத்துக்கான நீதி, சமாதானம் மற்றும் சுபீட்சமான எதிர்காலம் ஆகியவற்றை முன்னிறுத்தி தொடர்ந்து இயங்கத் தயாராக இருப்பதாக விலி நிக்கேல் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன மற்றும் மத சுதந்திரம் தொடர்பான காங்கிரஸ் குழுக் கூட்டத்துக்கு இணை தலைமைதாங்குவதற்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் விலி நிக்கேலின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெறக்கூடிய இலங்கையில் இன மற்றும் மத சுதந்திரம் தொடர்பான காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் இலங்கையில் வாழும் அனைத்து இனங்களினதும், குறிப்பாக ஈழத்தமிழ் சமூகத்தின் சிவில் மற்றும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் விரிவாக ஆராயப்படும்.

அதன்படி, இதற்கு இணைத் தலைமையேற்றுள்ள விலி நிக்கேல், இலங்கையில் இன மற்றும் மத சுதந்திரம் தொடர்பான காங்கிரஸ் குழுக் கூட்டத்துக்கு இணைத் தலைமைதாங்குவது குறித்து மிகுந்த பெருமிதமடைவதாகத் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி 'இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது அமெரிக்க கொள்கை வகுப்பாளர் என்ற ரீதியிலும், வட கரோலினா மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் சமூகத்தின் வலுவான ஆதரவாளன் என்ற அடிப்படையிலும் தமிழ் சமூகத்துக்கான நீதி, சமாதானம் மற்றும் சுபீட்சமான எதிர்காலம் ஆகியவற்றை முன்னிறுத்தி தொடர்ந்து இயங்குவேன்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 12:13:39
news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39
news-image

நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல்...

2025-03-16 11:19:05
news-image

கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதக்குழுக்கள் சர்வதேசத்தை திசைதிருப்பும்...

2025-03-16 11:30:22
news-image

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுனர்களுக்கும் நீதி வேண்டும்...

2025-03-16 11:29:10
news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:52:12
news-image

முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது 

2025-03-16 10:10:08
news-image

சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிப்பதற்கு பாராளுமன்றத்தை...

2025-03-16 10:27:19
news-image

அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியபோது பட்டலந்த அறிக்கையை...

2025-03-16 10:13:42
news-image

ஏப்ரல் 10ம் திகதி பட்டலந்த விசாரணை...

2025-03-16 09:49:47