இந்தியாவின் ஒத்துழைப்புடன் வடக்கில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்மொழிவு : ஜனாதிபதி ரணிலுக்கு முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா அனுப்பிவைப்பு

02 Mar, 2024 | 11:46 PM
image

ஆர்.ராம்

இந்தியாவின் ஒத்துழைப்புடன் வட மாகாணத்தில் பல வருட பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் முன்மொழிவுகளை முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாராஜா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

வட மாகாணத்தில் முன்னெடுக்கும் குறித்த செயற்றிட்டத்தினை ஏனைய மாகாணங்களிலும் முன்னெடுப்பதன் ஊடாக சமாந்தரமான வளர்ச்சிகள் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், அவர் அனுப்பி வைத்துள்ள முன்மொழிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தியா இலங்கையில் இருந்து 23 கடல் மைல் தொலைவில் உள்ளது. அத்துடன் இந்தியா உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்திலிருக்கும் ஜேர்மனை விஞ்சுவதற்கான பயணத்தில் வேமாக ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் சந்தையில் பிரவேசிக்கும் வகையில் இந்திய மத்திய அரசுடனான உறவுகள், இந்திய மாநிலங்களுடனான உறவுகள், இந்திய வணிகத்துறையினருடான உறவுகள் தொழில்நுட்பம் உட்பட பல்வேறுபட்ட பரந்துபட்ட துறைகளில் நிதியுதவி உள்ளிட்ட ஒத்துழைப்புக்களை பெறுவது நோக்கமாக உள்ளது. இதன் மூலமாக வடக்கு மாகாணத்தின் வளர்ச்சி தூண்டப்பட்டு அது பொருளாதார ரீதியான எழுச்சியை அடைவதற்கு வழிசமைக்கும்.

அதேநேரம் ஒரே நேரத்தில் வட மாகாணத்தில் சிறப்புப் பொருளாதார வலயங்களை ஸ்தாபிக்கும் பணிகளை முன்னெடுக்க முடியும்.

அதேநேரம், வடக்கு மாகாண பொருளதாரத்தினை மேம்படுத்துவதை அடிப்படையான இலக்காகக் கொண்டு, தமிழ்நாடு கடந்த ஆண்டு செய்தது போன்று இலங்கை, இந்தியா மற்றும் பிற கண்டங்களைச் சேர்ந்த வளவாளர்களை ஒருங்கிணைத்து ‘கற்பனை வட மாகாணம்’ என்றொரு அமர்வை நடத்துவதைப் பற்றி பரிசீலிக்க வேண்டும்.

அந்த மாநாட்டை வட மாகாணத்தில் அல்லது இந்தியாவில் நடத்தலாமா என்பது குறித்து சிந்திக்கும் அதேநேரம், பல்வேறு துறை சார்ந்த நிபுணத்துவ மூலங்களில் இருந்து பல ஆண்டுகள் மேம்பாட்டு ஒத்துழைப்பை அமைப்பது தொடர்பாக மாநாட்டில் கலந்துரையாடி வழிவரைபடத்தினை தயாரிக்கலாம்.

அத்துடன், மேற்கூறிய செயற்பாடுகள் அனைத்தும் கடல், வான்வழி இணைப்புத் திட்டங்கள், கிழக்கு மாகாணத்தில் எண்ணெய் தாங்கிகள், சுற்றுலாத்துறை, விமான நிலையங்களுடனான இணைப்புகள், கொழும்பில் துறைமுக மேம்பாடு சுற்றுலா மற்றும் திறந்த பொருளாதார உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகள் உள்ளிட்டவை பாராட்டத்தக்கவை.

அந்த வகையில், இந்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் மாகாண நிருவாகக் கட்டமைப்புக்களுக்கு வழங்கப்படுவதோடு தேவைப்பட்டால் நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய மாகாணங்களுக்கும் இம்முறையைப் பாயன்படுத்துவதன் ஊடாக அந்தந்த மாகாணங்களின் வளர்ச்சிகளும் தூண்டப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 76...

2025-03-23 09:53:51
news-image

சீனத் தூதுவரின் இல்லத்தில் ரணிலுக்கு இராப்போசனம்

2025-03-23 09:13:17
news-image

பிரதமர் மோடியின் விஜயத்திற்கு முன்னர் அமெரிக்கா...

2025-03-23 09:12:36
news-image

இன்றைய வானிலை

2025-03-23 06:35:51
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19