இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 3 ஆவது சட்ட மாநாடு

01 Mar, 2024 | 05:32 PM
image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 3 ஆவது சட்ட மாநாடு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தொடர்ச்சியான நிபுணத்துவ மேம்பாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்ட மாநாடு ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் நாளை 2 ஆம் திகதியும் நாளை மறுதினம் 3 ஆம் திகதியும் காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் நோர்த் கேட் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

இந்த சட்ட மாநாட்டில் பிரதம விருந்தினராக உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜாவும் சிறப்பு விருந்தினராக உயர்  நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

இந்த சட்ட மாநாட்டின் போது புகழ்பெற்ற வளவாளர்கள் சிலர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

இதன்போது பிணையில் விடுவிப்பது தொடர்பில் உள்ள புதிய சட்டஙகள் , தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் , நீதிமன்ற நெறிமுறைகள், சிவில் நடைமுறைச் சட்டத்தின் புதிய திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு  தலைப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.

மேலும் இந்த சட்ட மாநாட்டில் 150க்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175...

2025-02-15 13:58:01
news-image

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்...

2025-02-15 13:49:53
news-image

யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள...

2025-02-15 13:29:22
news-image

மூத்த ஊடக ஆசிரியர் பாரதியின் நினைவு...

2025-02-15 10:38:29
news-image

தமிழகத்தின் மனவளக்கலை பேராசிரியர் டாக்டர் ஞால...

2025-02-14 18:34:09
news-image

கெங்கல்ல தமிழ் வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு...

2025-02-14 16:48:49
news-image

கீரிமலை நகுலேச்சரத்தில் கொடியேற்றம்!

2025-02-13 18:24:08
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா 

2025-02-12 17:59:41
news-image

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இணுவில் கந்தசுவாமி...

2025-02-12 17:48:53
news-image

இலங்கை பத்திரிகைத் துறையில் ஐம்பது வருடங்களுக்கு...

2025-02-12 16:03:23
news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22