கொரிய மருத்துவர்கள் சங்கத்தின் அலுவலகங்கள் மீது தென் கொரிய பொலிஸார் இன்று முற்றுகைகளை நடத்தினர். தென் கொரிய மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால் வைத்தியசாலைகளில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இம்முற்றுகைகள் இடம்பெற்றுள்ளன.
சுமார் 10,000 கனிஷ்ட மருத்துவர்கள் கடந்த வாரம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக கனிஷ்ட மருத்துவர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளர்ஃ
மருத்துவர்கள் நேற்று வியாழக்கிழமைக்கு முன்னர் பணிக்குத் திரும்ப வேண்டுமென தென் கொரிய அரசாங்கம் காலக்கெடு விதித்திருந்தது.
பணிக்குத் திரும்பியவர்கள் தொடர்பான உத்தியோகபூர்வ தரவுகள் எதுவும் இல்லை என தென் கொரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்தும் பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றன்ர என யோன்ஹாப் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் 15 பெரிய வைத்தியசாலைகளில் திட்டமிடப்பட்டிருந்த 50 சதவீதமான சத்திரசிகிச்சைகள் இரத்துச் செய்யப்பட்டதாக தென் கொரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM