(நெவில் அன்தனி)
பாரிஸ் நகரில் ஆரம்பமாகவுள்ள 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான பாதுகாப்புத் திட்டங்களுடன் பாரிஸ் சிட்டி ஹோல் பொறியியலாளர் ஒருவருக்கு சொந்தமான கணினி மற்றும் இரண்டு யூ.எஸ்.பி. திறப்புகளைக் கொண்ட பை திருடப்பட்டுள்ளது. இந்தத் திருட்டு காரணமாக பிரான்ஸ் அதிகாரிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
பிரெஞ்சு தலைநகர் பாரிஸில் 2024 ஜூலை 26ஆம் திகதியிலிருந்து முதல் ஆகஸ்ட் 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழா தொடர்பான முக்கியமான பாதுகாப்புத் தகவல்கள் இந்த கணினியில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கெயா டு நோர்ட் என்ற ரயில் நிலையத்தில் வைத்து இந்த கணினியும் இரண்டு யூ.எஸ்.பி. திறப்புகளும் திருடப்பட்டுள்ளது.
க்ரெய்ல் நகருக்கு பயணிப்பதற்காக கெயா டு நோர்ட் ரயில் நிலையத்தில் 18ஆவது மேடையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் ஏறிய சிறிது நேரத்தில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக கணினி உரிமையாளரான பாரிஸ் சிட்டி ஹோல் ஊழியர் முறையிட்டுள்ளார்.
இந்த சம்பவரம் கடந்த திங்கட்கிழமை இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் வட்டாரம் தெரிவித்தது.
பையின் உரிமையாளர் ரயிலில் தனது ஆசனத்துக்கு மேலாக உள்ள பொதிகள் வைக்கும் பகுதியில் தனது பையை வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்தப் பை காணாமல் போயிருந்ததை அவர் கவனித்ததாக பொலிசாரிடம் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
புலனாய்வு பிரிவினருக்கு பொறியியலாளர் அளித்த வாக்குமூலத்தில், தனது பணி கணினி மற்றும் இரண்டு யூ.எஸ்.பி. குற்றிகளில் மாநகர பொலிஸார் தயாரித்த ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பான முக்கியமான தகவல்கள் இருந்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாரிஸ் சிட்டி ஹால் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
பிரெஞ்சு தலைநகரில் இடம்பெறும் பல திருட்டுகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. எனினும், நவீன யுகத்தின் 33ஆவது ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு ஐந்து மாதங்கள் உள்ள நிலையில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் பாரிஸ் அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.
இவ் விடயம் விளையாட்டு விழாவின் பாதுகாப்பில் மற்றொரு சிக்கலை உருவாக்கிவிட்டுள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டு விழா உத்தியோகபூர்வமாக ஜூலை 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள போதிலும் கால்பந்தாட்டம் மற்றும் றக்பி ஆகிய விளையாட்டுக்களின் முதலாம் கட்டப் போட்டிகள் ஜூலை 24ஆம் திகதி ஆரம்பமாகும்.
ஒலிம்பிக் விளையாட்டு விழாவின்போது 2,000 மாநகர பொலிஸாரை பணியில் நிறுத்த பாரிஸ் ஏற்பாட்டுக் குழு திட்டமிட்டுள்ளது. அவர்கள் 35,000 பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினருடன் இணைந்து 10,000 விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பு வழங்கவுள்ளனர்.
ஒலிம்பிக் விளையாட்டு விழா பாரிஸிலும் அதனைச் சூழவுள்ள நகரங்களிலும் நடைபெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM