மலைப் பத்தாண்டு அபிவிருத்தித் திட்டம் விரிவுபடுத்தப்படும் - பிரசன்ன ரணதுங்க

29 Feb, 2024 | 09:48 PM
image

மலைப் பத்தாண்டு பல்நோக்கு கிராமப்புற மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும். அதன்படி, களுத்துறை, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளுக்கு மேலதிகமாக ஏனைய 84 கிராம சேவகர் பிரிவுகளிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக 67 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

முன்னதாக, நாட்டின் 10 மாவட்டங்களில் மலை பத்தாண்டு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளை கருத்திற் கொண்டு வேறு ஒரு மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

களுத்துறை மாவட்டச் செயலகத்தில் நேற்று (28) நடைபெற்ற களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் தெரிவித்தார்.

களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அதன் இணைத் தலைவர் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தலைமையில் நடைபெற்றது.

அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளை தயாரிக்கும் போது கிராமப்புற மக்களின் தேவைகளை கவனத்தில் கொள்ள வேண்டுமென அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள பிரதேச செயலகங்கள் இத்திட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டன. ஆனால் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு களுத்துறை, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அந்த எல்லை கடல் மட்டத்திலிருந்து 150 மீற்றராக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது:

“மலைப் பத்தாண்டுத் திட்டத்தின் அனைத்துத் திட்டங்களும் கிராமியக் குழு மூலம் கண்டறியப்பட வேண்டும். எனவே கிராம சேவை மட்டத்தில் அந்த கிராமியக் குழுக்களை நியமிக்கவும். ஜூலை 31ம் திகதிக்குள் அனைத்து அபிவிருத்தி பணிகளையும் முடிக்க வேண்டும். புதிய திட்டங்களை தொடங்குவதை விட, நிறுத்தப்பட்ட திட்டங்களை முடிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும். அந்த குழுவின் மூலம் திட்டங்களின் அனைத்து கண்காணிப்பும் செய்யப்பட வேண்டும். கிராம மட்டத்தில் திட்டங்களை அடையாளம் காண்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவிடம் முன்வைக்கவும். அங்கு தீர்வு வழங்க முடியாவிட்டால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அனுப்புங்கள். அங்கிருந்து தீர்வு கிடைக்காவிட்டால் பிரதமர் இருக்கும் தேசியக் குழுவுக்கு அனுப்புங்கள். திட்டங்களை அடையாளம் காணும் போது, அவற்றை மத்திய அரசு, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் என தனித்தனியாக அடையாளப்படுத்தவும். திகதிகளுடன் திட்டங்களை உருவாக்கவும். நாட்டின் நிலையைப் புரிந்து கொண்டு, நாட்டின் பொருளாதாரத்துக்கு உதவும் திட்டங்களைத் தொடங்க உழைக்க வேண்டும்” என்றும் கூறினார்.    

களுத்துறை மாவட்டத்தில் பாலிந்த கண்டி, வலல்லாவிட்ட, அகலவத்தை, புளத்சிங்கள, மத்துகம மற்றும் இங்கிரிய ஆகிய 06 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 235 கிராம சேவகர் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

"மலைப் பத்தாண்டு" என்பது பத்து வருட பல்நோக்கு கிராமப்புற மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டமாகும். இந்நாட்டின் மலையகப் பகுதிகளில் வாழும் மக்களின் பொது உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த வருட வரவு செலவு திட்டத்தில் அந்த வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை 10,000 மில்லியன் ரூபா.

கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி, களுத்துறை, பதுளை, குருநாகல் மற்றும் அம்பாறை ஆகிய 11 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

வடக்கில் கொழும்பு மாவட்டத்தையும், கிழக்கில் இரத்தினபுரி மாவட்டத்தையும், தெற்கில் காலி மாவட்டத்தையும், மேற்கில் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேல் மாகாணத்தின் மிகப்பெரிய மாவட்டம் களுத்துறை ஆகும். பண்டைய காலங்களிலிருந்து, இந்த மாவட்டம் பொருளாதார விவகாரங்களில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது. களுத்துறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளின் மொத்த எண்ணிக்கை 14 ஆகும். இங்கு தற்போதைய மக்கள் தொகை பன்னிரெண்டு இலட்சத்துக்கும் அதிகமாக உள்ளனர்.

இந்த ஆண்டு களுத்துறை மாவட்டத்திற்கான அபிவிருத்தி நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலும் அமைச்சர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான அனுப பாஸ்குவல், பியல் நிஷாந்த, களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, லலித் வர்னகுமார, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ்.  சத்தியானந்த, மேல்மாகாண பிரதம செயலாளர் தம்மிக்க விஜயசிங்க, களுத்துறை மாவட்ட செயலாளர் பிரசன்ன ஜனக குமார உட்பட முக்கியஸ்தர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதவாச்சியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

2025-03-20 10:04:06
news-image

கொழும்பில் 19 கிலோ நிறையுடைய போதைப்பொருட்களுடன்...

2025-03-20 10:04:27
news-image

பனிப்போர் காலத்தில் இலங்கையில் சிஐஏயின் இரகசிய...

2025-03-20 09:59:59
news-image

400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன்...

2025-03-20 09:30:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின்...

2025-03-20 09:37:05
news-image

மன்னார் விளாங்குளி கிராம வயலில் உயிரிழந்த...

2025-03-20 09:48:33
news-image

தேசபந்து தென்னக்கோனின் பிணை மனு மீதான...

2025-03-20 09:09:57
news-image

ரயில் மோதி வாகனம் விபத்து ; ...

2025-03-20 09:14:32
news-image

வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு ;...

2025-03-20 08:58:08
news-image

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க...

2025-03-20 08:40:17
news-image

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு...

2025-03-20 08:56:30
news-image

இன்றைய வானிலை

2025-03-20 06:14:11