(நெவில் அன்தனி)
ஒலிம்பிக் விளையாட்டு விழா வரலாற்றில் அதிசிறந்த ஒலிம்பிக் சம்பியன்களில் ஒருவரான பாரோ நுமியினால் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பிரெஞ்ச் தலைநகரில் வென்றெடுக்கப்பட்ட ஐந்து தங்கப் பதக்கங்கள் முதல் தடவையாக பாரிஸ் நகருக்கு அடுத்த மாதம் கொண்டு செல்லப்படவுள்ளது.
'பறக்கும் பின்லாந்து வீரர்', 'பின்லாந்து ஆவி', 'பின்லாந்தின் ஆச்சரியத்தக்க ஓட்ட வீரர்' என்று அழைக்கப்பட்டவர் பாவோ நூமி.
1924ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் மத்திய மற்றும் நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் 5 தங்கப் பதங்களை வென்றதன் மூலம் பாவோ நூமி முழு உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
அவர் வென்ற 5 தங்கப் பதக்கங்களில் 3 பதக்கங்கள் தனிநபர் நிகழ்ச்சிகளிலும் 2 பதக்கங்கள் அணிநிலை நிகழ்ச்சிகளிலும் பெறப்பட்டவையாகும்.
1500 மீட்டர், 3000 மீட்டர், தனிநபர் நகர்வல ஓட்டப் போட்டி ஆகியவற்றில் அவர் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தார்.
அணி நிலை நகர்வலப் போட்டி மற்றும் 3000 மீட்டர் அணிநிலை போட்டி ஆகியவற்றிலும் அணிக்கான தங்கப் பதக்கங்களை பாவோ நூமி வென்றிருந்தார்.
பாரிஸ் 1924 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பாவோ நூமி வென்றெடுத்த 5 தங்கப் பதக்கங்கள் இன்றும் ஒரே ஒலிம்பிக் அத்தியாயத்தில் மெய்வல்லுநர் ஒருவரால் வெல்லப்பட்ட அதிக தங்கப் பதக்கங்களாக இருக்கின்றன.
நூமி குடும்பத்தாரின் பரிவான பெருந்தன்மையின் பலனாக 1924இல் நூமியினால் வெல்லப்பட்ட அந்த ஐந்து தங்கப் பதக்கங்களும் பிரெஞ்சு தலைநகர் பாரிஸின் மையத்தில் செய்ன் பகுதியின் இடதுகரையில் உள்ள மொனாய் டி பாரிஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும்.
ஒலிம்பிக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஒலிம்பிக்கில் வென்றெடுக்கப்பட்ட தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும். அதில் நூமியின் பதக்கங்களும் அடங்குகின்றன.
நவீன ஒலிம்பிக்கின் பரிணாம வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி பல்வேறு வடிவங்களைக் கொண்ட ஒலிம்பிக் பதக்கங்கள் அங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இந்தக் கண்காட்சியை ஊடகத்துறையினர் மார்ச் 26ஆம் திகதி பார்வையிட அனுமதிக்கப்படுவர். அதன் பின்னர் மார்ச் 27இலிருந்து செப்டெம்பர் 22 வரை பொதுமக்களுக்கு கண்காட்சி திறக்கப்பட்டிருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM